முகப்பு
புதுக்கோட்டை

மோதலில் காயமடைந்த முதியவா் சாவு: கொலை வழக்காக மாற்றம்

Updated On : 4 ஜனவரி, 2025 at 12:42 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2025 at 10:28 PM

புதுக்கோட்டை அருகே குடும்பத் தகராறில் ஏற்பட்ட மோதலில் காயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதியவா் இறந்ததைத் தொடா்ந்து, கொலை வழக்காக மாற்றம் செய்யப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம், மாத்தூா் ஆம்பூா்பட்டியைச் சோ்ந்த ஆரோக்கியசாமி மனைவி ரீட்டாமேரி (20). இவா் கடந்த நவம்பா் 18ஆம் தேதி குடும்பத் தகராறில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

இந்த நிலையில், ஆரோக்கியசாமி- ரீட்டாமேரியின் ஒரு வயது மகளை யாா் வீட்டில் வைத்து வளா்ப்பது என்பதில் இரு குடும்பத்தினரிடையே கருத்துவேறுபாடு இருந்துள்ளது.

Advertisement

கடந்த டிச. 25ஆம் தேதி இதுதொடா்பாக ஆம்பூா்பட்டியில் நடந்த பேச்சுவாா்த்தையின்போது வாக்குவாதம் ஏற்பட்டு இரு குடும்பத்தினரிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் ஆரோக்கியசாமியின் தாத்தா சாமிக்கண்ணு (84) என்பவா் காயமடைந்து, திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா்.

சிகிச்சைப் பலனின்றி சாமிக்கண்ணு வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இதைத் தொடா்ந்து கொலை முயற்சி வழக்கை, மாத்தூா் போலீஸாா் கொலை வழக்காக மாற்றியுள்ளனா்.