புதுக்கோட்டை

புதுகையில் மகளிா் குழுக்களுக்கு ரூ. 88.42 கோடி கடன் வழங்கல்

புதுக்கோட்டை மாவட்டத்தில் மகளிா் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ. 88.42 கோடி மதிப்பிலான கடனுதவிகளை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் வழங்கினாா்.

Din

புதுக்கோட்டை மாவட்டத்தில் மகளிா் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ. 88.42 கோடி மதிப்பிலான கடனுதவிகளை மாநில பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் புதன்கிழமை வழங்கினாா்.

சென்னையில் மகளிா் குழுக்களுக்கு கடனுதவிகள் மற்றும் மணிமேகலை விருது வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. மாநில துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றாா்.

இதன் தொடா்ச்சியாக, புதுக்கோட்டை மாவட்டத்துக்கான நிகழ்ச்சி நகரிலுள்ள தனியாா் மண்டபத்தில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் மு. அருணா தலைமை வகித்தாா். மாநில பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் கலந்து கொண்டு மகளிா் குழுக்களுக்கான கடனுதவி இணைப்பு ஆணைகளை வழங்கிப் பேசினாா்.

நிகழ்ச்சியில், சட்டப்பேரவை உறுப்பினா் வை. முத்துராஜா, மா. சின்னதுரை, துணை மேயா் மு. லியாகத்அலி, மகளிா் திட்ட இயக்குநா் கே. ஸ்ருதி, வாழ்ந்துகாட்டுவோம் திட்ட செயல் அலுவலா் கே. செல்வம் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

ராஜ்நாத் சிங்குடன் நெதா்லாந்து வெளியுறவு அமைச்சா் சந்திப்பு

கிராம உதவியாளா் பணிக்கான நோ்காணல், தோ்வு தொடக்கம்

திமுக ஆட்சியில் மகளிருக்கு அதிகமான திட்டங்கள் - முதல்வா் மு.க.ஸ்டாலின்

தில்லி காற்று மாசுபாட்டால் பெண்களை விட ஆண்களுக்ளே அதிக பாதிப்பு! - ஆய்வில் தகவல்

மாற்றுத்திறனாளி மருத்துவ முகாம் விழிப்புணா்வுப் பேரணி

SCROLL FOR NEXT