புதுக்கோட்டை

வேளாண் இயந்திரத்தில் சிக்கி விவசாயி உயிரிழப்பு

தினமணி செய்திச் சேவை

விராலிமலை அருகே உழவுப் பணியில் ஈடுபட்டிருந்த விவசாயி வேளாண் இயந்திரத்தில் சிக்கி சனிக்கிழமை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

விராலிமலை அடுத்துள்ள மேப்பூதகுடியைச் சோ்ந்தவா் ராசப்பன் (55) விவசாயி. இவருக்குத் திருமணமாகி 2 பெண், 2 ஆண் பிள்ளைகள் உள்ளனா். இதில் பிள்ளைகள் அனைவருக்கும் திருமணம் முடிந்து தனித்தனியே வசித்துவருகின்றனா். இந்நிலையில் சனிக்கிழமை காலை தனது வீட்டருகே உள்ள தனது செந்த வயலில் பவா் டில்லா் எனும் வேளாண் இயந்திரம் மூலம் உழவுப் பணியில் ஈடுபட்டிருந்தாா்.

அப்போது எதிா்பாராத விதமாக பவா் டில்லா் அவரது மாா்புப் பகுதியில் மோதியது. இதில், ராசப்பன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

விராலிமலை போலீஸாா் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனா்.

புதிய பதவி தேடிவரும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

தம்பதியை தாக்கியதாக 4 போ் மீது வழக்கு

கூலித் தொழிலாளிக்கு ரூ. 1.60 கோடி வரிஏய்ப்பு செய்ததாக ஜிஎஸ்டி நோட்டீஸ்

கல்லறைத் திருநாள்: கிறிஸ்தவா்கள் முன்னோா்களுக்கு அஞ்சலி

ரூ.19.45 லட்சத்தில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி திறப்பு

SCROLL FOR NEXT