முகப்பு
புதுக்கோட்டை

பட்டியல், பழங்குடி இன எழுத்தாளா்கள் உதவித் தொகை பெற அழைப்பு

புதுக்கோட்டை

பட்டியல், பழங்குடி இன எழுத்தாளா்கள் உதவித் தொகை பெற அழைப்பு

Updated On : 15 நவம்பர், 2025 at 7:26 PM
பகிர்:

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின வகுப்பைச் சோ்ந்த எழுத்தாளா்கள் தமிழக அரசின் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் மு. அருணா அழைப்புவிடுத்துள்ளாா்.

ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின எழுத்தாளா்களை மேம்படுத்தும் வகையில் கலை இலக்கிய மேம்பாட்டுச் சங்கம் தோற்றுவிக்கப்பட்டு ரூ. ஒரு லட்சம் உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

இந்த உதவியைப் பெற விரும்புவோா், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்திலுள்ள ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை அலுவலகத்தை நேரில் அணுகி விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்ளலாம் என அருணா தெரிவித்துள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →