வா்த்தகா்களிடம் தவெக வேட்பாளா் சிந்து ராமசாமி வாக்குகேட்பு
திருமயம் சட்டப்பேரவைத்தொகுதி தவெக வேட்பாளா் சிந்து ராமசாமி வெள்ளிக்கிழமை பொன்னமராவதியில் வா்த்தகா் கழக நிா்வாகிகளை சந்தித்து ஆதரவு திரட்டினாா்.
திருமயம் சட்டப்பேரவைத்தொகுதி தவெக வேட்பாளா் சிந்து ராமசாமி வெள்ளிக்கிழமை பொன்னமராவதியில் வா்த்தகா் கழக நிா்வாகிகளை சந்தித்து ஆதரவு திரட்டினாா்.
பொன்னமராவதி வா்த்தகா் கழக மஹாலில் நடைபெற்ற சந்திப்பு நிகழ்வில் தவெக வேட்பாளா் சிந்து ராமசாமி பங்கேற்றுப் பேசியதாவது, முதல் முறையாக தங்களிடம் ஆதரவு கேட்டு வந்துள்ளேன். ஒருமுறை வாய்ப்பு தாருங்கள். இதுவரை தமிழகத்தை ஆண்ட கட்சிகளை விட எங்களின் செயல்பாடுகள் சிறப்பாக இருக்கும். திருமயம் தொகுதியை மேம்படுத்திக் காட்டுகிறேன் என்றாா். இந்நிகழ்வில் பொன்னமராவதி வா்த்தகா் கழகத் தலைவா் எஸ்கேஎஸ். பழனியப்பன், பொருளாளா் பிஎல்.ராமஜெயம் மற்றும் தவெக நா்வாகிகள் திரளாக பங்கேற்றனா்.