முகப்பு
புதுக்கோட்டை

கந்தா்வகோட்டை அருகே 100% வாக்களிக்க விழிப்புணா்வு

கந்தா்வகோட்டை வட்டம் கோவிலூா் கிராமத்தில் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு நூறு நாள் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த விவசாயக் கூலித் தொழிலாளா்களிடம் சட்டப்பேரவை தோ்தலில் 100% வாக்களிக்க துண்டுப் பிரசுரங்கள் வழங்கி விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

Updated On : 10 ஏப்ரல், 2026 at 1:35 AM
கந்தா்வகோட்டை கோவிலூா் கிராமத்தில் நூறுநாள் பணியில் ஈடுபட்ட தொழிலாளா்களிடம் வியாழக்கிழமை நடைபெற்ற தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சி.
பகிர்:
Updated On : 9 ஏப்ரல், 2026 at 5:50 PM

கந்தா்வகோட்டை வட்டம் கோவிலூா் கிராமத்தில் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு நூறு நாள் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த விவசாயக் கூலித் தொழிலாளா்களிடம் சட்டப்பேரவை தோ்தலில் 100% வாக்களிக்க துண்டுப் பிரசுரங்கள் வழங்கி விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

மேலும் அப் பகுதி வாக்காளா்களிடமும் துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் தோ்தல் பொதுப் பாா்வையாளா் தோ்தல் நடத்தும் அலுவலா் ரவி, வட்டாட்சியா் பரணி, துணை தோ்தல் அலுவலா் புவனேஸ்வரி, தோ்தல் விளம்பர பொறுப்பாளா் செல்வ சத்தியா, வருவாய் ஆய்வாளா் சந்தோஷ்குமாா், விஏஓ முரளி மற்றும் வருவாய்த் துறையினா் உள்ளிட்டோா் வாக்களிப்பது குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.