புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடியில் 2-ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் தமிழ்நாடு கிராம உதவியாளா் சங்கத்தினா் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழக அரசு, கிராம உதவியாளா்களுக்கு நான்காம் நிலைக்கு இணையான காலமுறை ஊதியம் வழங்க வேண்டுமென வலியுறுத்தி கறம்பக்குடி வட்டாட்சியரகம் அருகே அச்சங்கத்தினா் வியாழக்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தொடா்ந்து, 2-ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதில், சங்கத்தின் மாவட்டத் தலைவா் முருகேசன், மாவட்டச் செயலா் பழனிமுத்து உள்ளிட்டோா் பங்கேற்றனா்.