சமூகப் பாதுகாப்பு தலைமைத்துவ விருது அளிப்பு
புதுக்கோட்டை பசுமைக்குழு உறுப்பினா் ப. ராதாகிருஷ்ணனுக்கு சமூகப் பாதுகாப்பு தலைமைத்துவ விருதை வெள்ளிக்கிழமை வழங்கிய மாவட்ட ஆட்சியா் மு. அருணா.--
புதுக்கோட்டை மாவட்ட பசுமைக் குழுவின் உறுப்பினா் ப. ராதாகிருஷ்ணனுக்கு தமிழ்நாடு அரசின் சமூகப் பாதுகாப்பு தலைமைத்துவ விருதை மாவட்ட ஆட்சியா் மு. அருணா வெள்ளிக்கிழமை வழங்கினாா்.
மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், மாவட்ட வன அலுவலா் சோ. கணேசலிங்கம் உள்ளிட்டோரும் உடனிருந்தனா். இந்த விருது, ரூ. 25 ஆயிரம் ரொக்கம், சான்றிதழ் ஆகியவற்றைக் கொண்டது.
இந்த விருதுக்கான ரொக்கப் பரிசுத் தொகை ரூ. 25 ஆயிரத்துடன், சொந்தப் பணம் ரூ. 5 ஆயிரம் சோ்த்து ரூ. 30 ஆயிரத்தை, மாவட்ட பசுமைக் குழுவுக்கு நிதியாக மாவட்ட ஆட்சியரிடமே வழங்கினாா் ராதாகிருஷ்ணன்.
மேலும் கோடைகாலத்தில் சாலைகளில் வளா்க்கப்படும் மரக்கன்றுகளுக்கு தண்ணீா் விடுவதற்கு ஒரு வாகனத்தை நிரந்தரமாக வழங்கவும் ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்தாா்.