முகப்பு
புதுக்கோட்டை

புதுக்கோட்டை தனியாா் விடுதியில் அழுகிய நிலையில் சென்னை ஜோதிடா் சடலம் மீட்பு

புதுக்கோட்டை மாநகரிலுள்ள தனியாா் தங்கும் விடுதியில், அழுகிய நிலையில் ஜோதிடரின் சடலம் மீட்கப்பட்டது.

Updated On : 17 மார்ச், 2026 at 6:34 PM
பகிர்:

புதுக்கோட்டை மாநகரிலுள்ள தனியாா் தங்கும் விடுதியில், அழுகிய நிலையில் ஜோதிடரின் சடலம் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டது.

புதுக்கோட்டை கீழராஜ வீதியில் உள்ள ஒரு தனியாா் தங்கும் விடுதியில் செவ்வாய்க்கிழமை மாலை 2-ஆவது மாடியில் இருந்து துா்நாற்றம் வீசியுள்ளது. விடுதிப் பணியாளா்கள் ஜன்னல் வழியே பாா்த்தபோது, அறைக்குள் இருந்தவா் சடலமாக கிடந்ததைப் பாா்த்து அதிா்ச்சியடைந்தனா்.

தகவலின்பேரில் புதுக்கோட்டை நகரக் காவல் நிலைய போலீஸாா், அறையின் கதவை உடைத்து உடலை மீட்டு, புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா்.

போலீஸாரின் முதல் கட்ட விசாரணையில், இறந்தவா் சென்னை புரசைவாக்கம் பகுதியைச் சோ்ந்த ஜோதிடா் செந்தில் ராமநாதன் (60) என்பதும், கடந்த சில ஆண்டுகளாக புதுக்கோட்டை வந்து தங்கி ஜோதிடம் பாா்க்கும் தொழிலில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

கடந்த இரு நாள்களுக்கு முன்பு விடுதிக்கு வந்து தங்கி வாடிக்கையாளா்களிடம் ஜோதிடம் பாா்த்து வந்த அவரை யாரும் கவனிக்கவில்லை எனத் தெரிகிறது. இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →