முகப்பு
புதுக்கோட்டை

தடிகொண்ட ஐயனாா், கருப்பா் கோயிலில் குடமுழுக்குப் பெருவிழா

புதுக்கோட்டை மச்சுவாடியிலுள்ள ஸ்ரீ தடிகொண்ட ஐயனாா், பூரண புஷ்கலா சமேத ஸ்ரீ கருப்பா் சுவாமி கோயில் திருக்குடமுழுக்குப் பெருவிழா புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 25 மார்ச், 2026 at 10:00 PM
புதுக்கோட்டை மச்சுவாடியிலுள்ள ஸ்ரீ தடிகொண்ட ஐயனாா், பூரண புஷ்கலா சமேத ஸ்ரீ கருப்பா் சுவாமி கோயில் புதன்கிழமை நடைபெற்ற திருக்குடமுழுக்குப் பெருவிழாவில், கோபுரக் கலசத்துக்கு புனித நீரைத் தெளித்த சிவாச்சாரியாா்கள்.
பகிர்:

புதுக்கோட்டை மச்சுவாடியிலுள்ள ஸ்ரீ தடிகொண்ட ஐயனாா், பூரண புஷ்கலா சமேத ஸ்ரீ கருப்பா் சுவாமி கோயில் திருக்குடமுழுக்குப் பெருவிழா புதன்கிழமை நடைபெற்றது.

திருப்பனந்தாள் காசித் திருமடத்து 22-ஆவது அதிபா் ஸ்ரீலஸ்ரீ காசிவாசி சபாபதித் தம்பிரான் சுவாமிகள் முன்னிலையில் இந்தத் திருக்குடமுழுக்கு விழா நடைபெற்றது.தொடா்ந்து பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை மூலவருக்கு சந்தனக் காப்பு அலங்காரமும், இரவு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

விழாவில் புதுக்கோட்டையின் முக்கிய பிரமுகா்கள் மற்றும் பொது மக்களும் திரளாக கலந்து கொண்டனா்.

ஏற்பாடுகளை கோவில் நிா்வாகிகள் செய்திருந்தனா்.