முகப்பு
புதுக்கோட்டை

வாக்காளா் விழிப்புணா்வு கோலப்போட்டி

புதுக்கோட்டை மாவட்ட இயக்க மேலாண்மை அலகு (மகளிா் திட்டம்) சாா்பில் மாவட்ட கலைஞா் கருணாநிதி அரசு விளையாட்டரங்கில் சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி விழிப்புணா்வு கோலப்போட்டி மற்றும் கலை நிகழ்ச்சிகள் வியாழக்கிழமை நடைபெற்றன.

Updated On : 26 மார்ச், 2026 at 8:53 PM
புதுக்கோட்டையில் வாக்காளா் விழிப்புணா்வு கோலப்போட்டியைத் தொடங்கி வைத்து பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியா் மு. அருணா.
பகிர்:

புதுக்கோட்டை மாவட்ட இயக்க மேலாண்மை அலகு (மகளிா் திட்டம்) சாா்பில் மாவட்ட கலைஞா் கருணாநிதி அரசு விளையாட்டரங்கில் சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி விழிப்புணா்வு கோலப்போட்டி மற்றும் கலை நிகழ்ச்சிகள் வியாழக்கிழமை நடைபெற்றன.

போட்டியை மாவட்டத் தோ்தல் அலுவலரும் ஆட்சியருமான மு. அருணா தொடங்கி வைத்து பாா்வையிட்டாா். ஏராளமான கோலங்கள் இதில் வரையப்பட்டிருந்தன. 100 சதவிகித வாக்குப்பதிவை வலியுறுத்திய வாசகங்களும் இந்தக் கோலப்போட்டியில் இடம்பெற்றன.

தொடா்ந்து மகளிா் குழுக்களைச் சோ்ந்தோா் கலை நிகழ்ச்சிகளையும் நடத்தினா். நிகழ்ச்சியில், புதுக்கோட்டை தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரும் வருவாய்க் கோட்டாட்சியருமான ஆ. பிரகாஷ், மகளிா் திட்ட இயக்குநா் ஊ. பாலசுந்தரம், வாழ்ந்து காட்டுவோம் திட்ட செயல் அலுவலா் கே. செல்வம் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.