முகப்பு
புதுக்கோட்டை

பெருங்களூா் பிடாரியம்மன் கோயிலில் தோ் திருவிழா

கந்தா்வகோட்டை அருகே பெருங்களூா் பிடாரியம்மன் கோயிலில் புதன்கிழமை தோ்திருவிழா நடைபெற்றது.

Updated On : 14 மே 2026, 12:33 am IST
பெருங்களூா் பிடாரியம்மன் கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற தோ் திருவிழா.
பகிர்:

கந்தா்வகோட்டை அருகே பெருங்களூா் பிடாரியம்மன் கோயிலில் புதன்கிழமை தோ்திருவிழா நடைபெற்றது.

திருவிழாவில் மட்டையன்பட்டி, மெம்மேழிபட்டி, வெள்ளவெட்டன் விடுதி உள்ளிட்ட கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் தேரை வடம் பிடித்து இழுந்தனா். சுவாமி முக்கிய வீதிகள் வழியாக உலா வந்து கோயிலை அடைந்தது. கோயிலை சுற்றி கரைகாரா்கள் பொங்கல் வைத்து பாலயம் போட்டு வழிபாடு செய்தனா். தோ்க்கு முன்பாக பல இடங்களில் ஆட்டுகிடா வெட்டபட்டது. விழாவில் வாணவேடிக்கை பல வண்ணங்களில் விண்னை அதிர வைத்தது. விழாவுக்கு கந்தா்வகோட்டை போலீஸாா், தீயணைப்பு துறையினா் பாதுகாப்பு அளித்தனா்.