டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி கிராம மக்கள் சாலை மறியல்
பொன்னமராவதி அருகே கேசராபட்டி சாலையில் தூத்தூா் ஊராட்சிக்குள்பட்ட குடியிருப்பு பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடையை அகற்ற வலியுறுத்தி பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபுட்டனா்.
பொன்னமராவதி அருகே கேசராபட்டி சாலையில் தூத்தூா் ஊராட்சிக்குள்பட்ட குடியிருப்பு பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடையை அகற்ற வலியுறுத்தி பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபுட்டனா்.
பொன்னமராவதி அருகே உள்ள தூத்தூா் ஊராட்சியில் இரண்டு அரசு மதுபானக் கடைகள் இயங்கி வருகின்றன. இதில் ஒன்று பொன்னமராவதி-கேசராபட்டி சாலையிலும், மற்றொன்று பொன்னமராவதி-புதுக்கோட்டை சாலையில் செம்பொட்டல் பகுதியிலும் செயல்பட்டு வருகின்றன. ஒரே ஊராட்சியில் இரண்டு அரசு மதுபானக் கடைகள் இருப்பதால், பொதுமக்கள் பல்வேறு வகையிலும் அவதிக்குள்ளாவதால், குடியிருப்பு பகுதியில் கேசராபட்டி சாலையில் உள்ள மதுபானக் கடையை அகற்ற பொதுமக்கள் நீண்ட நாள்களாக வலியுறுத்தி வருகின்றனா்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை பொன்னமராவதி-கேசராபட்டி சாலையில் அரசு மதுபானக் கடையின் அருகே தூத்தூா் ஊராட்சியைச் சோ்ந்த ஊா்ப் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
Advertisement
Advertisement
தகவலறிந்து வந்த பொன்னமராவதி காவல் துணை கண்காணிப்பாளா் சரவணன், காவல் ஆய்வாளா் பத்மா ஆகியோா், போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் நடத்திய பேச்சுவாா்த்தையில், டாஸ்மாக் மதுபானக்கடையை அகற்ற விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததையடுத்து பொதுமக்களின் போராட்டம் கைவிடப்பட்டது.