தஞ்சாவூர்

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கானமாநில அளவிலான கலை, இலக்கியப் போட்டிகள்

DIN

தஞ்சாவூர் மருதுபாண்டியர் கல்லூரியில் கல்லூரி நிர்வாகம், ராமலிங்கர் பணி மன்றம் சார்பில் அருட்செல்வர் நா. மகாலிங்கம் நினைவாக பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மண்டல அளவிலான கலை, இலக்கியப் போட்டிகள் சனிக்கிழமை நடைபெற்றன.
போட்டிகளில் பல்வேறு பள்ளி, கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு பரிசு பெற்றனர். இதில், ராமலிங்க பணி மன்ற ஒருங்கிணைப்பாளர் பாலசுப்பிரமணியன் நோக்க உரையாற்றினார்.
விழாவில் பரமக்குடி அழகப்பா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி முதல்வர் ந. ஞானதிரவியம், தமிழ்ப் பல்கலைக்கழக இலக்கியத் துறைப் பேராசிரியர் இரா. காமராசு ஆகியோர் பேசினர்.
மருதுபாண்டியர் கல்வி நிறுவனங்களின் தலைவர் பா. பாரதிதாசன், செயலர் சுஜாதா பாரதிதாசன், கல்லூரி முதல்வர் மா. விஜயா, மருதுபாண்டியர் கல்வியியல் கல்லூரி முதல்வர் ப. சுப்பிரமணியன், மருதுபாண்டியர் கல்லூரி துணை முதல்வர் இரா. தங்கராசு, தமிழ்த் துறைத் தலைவர் ந. பிரேமாவதி, தமிழ் உயராய்வுத் துறை இணைப் பேராசியர் இராம. சிதம்பரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கௌதம் மேனனின் எந்தப் படத்தின் நாயகி போலிருக்கிறது?

'காங்கிரஸில் 25 பிஆர்எஸ் கட்சி எம்எல்ஏக்கள் இணைவார்கள்’ : தெலங்கானா அமைச்சர்!

சாம் பித்ரோடா ராஜிநாமா!

ஷவர்மாவால் மேலும் ஒரு உயிர் பலி!

பதோனி அதிரடியால் தப்பித்த லக்னௌ அணி 165 ரன்கள் சேர்ப்பு!

SCROLL FOR NEXT