கும்பகோணத்தில் டிச.30-இல் மின்தடை
பராமரிப்புப் பணிகள் காரணமாக கும்பகோணம் நகர் முழுவதும் வரும் 30-ஆம் தேதி மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.
பராமரிப்புப் பணிகள் காரணமாக கும்பகோணம் நகர் முழுவதும் வரும் 30-ஆம் தேதி மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.
இதுகுறித்து மின்வாரிய உதவி செயற்பொறியாளர் கருணாகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கும்பகோணம் மற்றும் சாக்கோட்டை துணை மின் நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், கும்பகோணம் நகரம் முழுவதும், நாச்சியார்கோவில், திருநாகேஸ்வரம், சுவாமிமலை, திருக்கருகாவூர், வலங்கைமான், ஆலங்குடி, பாபநாசம், கபிஸ்தலம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் வரும் 30-ஆம் தேதி மின்சார விநியோகம் இருக்காது.