முகப்பு
தஞ்சாவூர்

பட்டுக்கோட்டையில் இன்று மின்நுகர்வோர்  குறைதீர் கூட்டம்

பட்டுக்கோட்டையில் மின்நுகர்வோர் குறைதீர் நாள் கூட்டம் வியாழக்கிழமை (டிச. 28) நடைபெறவுள்ளது. 

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:27 PM
பகிர்:

பட்டுக்கோட்டையில் மின்நுகர்வோர் குறைதீர் நாள் கூட்டம் வியாழக்கிழமை (டிச. 28) நடைபெறவுள்ளது. 
இதுகுறித்து பட்டுக்கோட்டை மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகச் செயற்பொறியாளர் வி.மாறன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பட்டுக்கோட்டை பாளையம் பகுதியிலுள்ள மின் வாரிய கோட்டச் செயற்பொறியாளர் அலுவலகத்தில் மின் நுகர்வோர் மாதாந்திர குறைதீர் கூட்டம் தஞ்சை மின்பகிர்மான வட்ட மேற்பார்வைப் பொறியாளர் டி.என்.சங்கரன் தலைமையில் வியாழக்கிழமை காலை 10.30 மணிக்கு நடைபெறவுள்ளது. 
இதில், பட்டுக்கோட்டை, மதுக்கூர், அதிராம்பட்டினம், பேராவூரணி, திருச்சிற்றம்பலம் பகுதிகளைச் சேர்ந்த மின் நுகர்வோர் தங்களது குறைகளை தெரிவித்து, பயன்பெறலாம்.

முழு கட்டுரையைப் படிக்க →