தஞ்சாவூர்

மகனை காணவில்லையென தந்தை புகார்

DIN

கும்பகோணம் பிள்ளையார்கோயில் தெருவைச் சேர்ந்தவர் ஞானஸ்கந்தன் (51).  இவர் வண்டுவாஞ்சேரியில் தொடக்கப் பள்ளி ஆசிரியராக உள்ளார். இவரது மகன் சங்கராத்மஜன் (19).  கும்பகோணத்தில் உள்ள வேதபாடசாலை ஒன்றில் படித்து வந்தார். 5 ஆண்டுகள் படிக்க வேண்டிய இந்த வகுப்பு இன்னும் சில மாதங்களில் நிறைவு பெற உள்ளது.
அண்மையில் வேதபாடசாலை மாணவர்களோடு திருவண்ணாமலைக்கு சென்ற அந்த மாணவர் ரமண   மகரிஷி ஆசிரமத்துக்கு சென்றபோது,  அங்கிருந்து ஊருக்கு வர மறுத்துவிட்டாராம்.  பின்னர் வேதபாடசாலை ஆசிரியர்கள் சங்கராத்மஜனை சமாதானப்படுத்தி அழைத்து வந்தனர். இந்நிலையில் கடந்த 15ஆம் தேதி வீட்டிலிருந்த சங்கராத்மஜன் திடீரென காணாமல் போய்விட்டார்.  பின்னர் வீட்டில் " நான் முக்தி அடைய செல்கிறேன்; என்னை தேட வேண்டாம் " என கடிதம் எழுதிவைத்துவிட்டு சங்கராத்மஜன் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து கும்பகோணம் கிழக்கு காவல்நிலையத்தில் தந்தை ஞானஸ்கந்தன் அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து தேடிவருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தெப்பக்குளத்தில் குதித்து மளிகைக்கடைக்காரா் தற்கொலை

தூத்துக்குடி அருகே திருட்டு வழக்கில் இருவா் கைது

சாலை விபத்தில் இளைஞா் பலி

கொடைக்கானல் மேல்மலைப் பகுதிகளில் மழை

திருமானூா் பகுதியில் காற்றுடன் மழை

SCROLL FOR NEXT