தஞ்சாவூர்

மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதல்: இருவர் சாவு

தஞ்சாவூர் அருகேயுள்ள வண்ணாரப்பேட்டை காமராஜர் நகரைச் சேர்ந்தவர் சண்முகம் மகன் செந்தில்குமார் (27). கட்டுமானத் தொழிலாளி. இவரும் அதே

DIN

தஞ்சாவூர் அருகேயுள்ள வண்ணாரப்பேட்டை காமராஜர் நகரைச் சேர்ந்தவர் சண்முகம் மகன் செந்தில்குமார் (27). கட்டுமானத் தொழிலாளி. இவரும் அதே பகுதியைச் சேர்ந்த நாகம்மாளும் (60) மோட்டார் சைக்கிளில் புறவழிச்சாலையில் செவ்வாய்க்கிழமை சென்று கொண்டிருந்தனர். வெட்டிக்காடு பிரிவு சாலையில் திரும்பிய இவர்களது மோட்டார் சைக்கிள் மீது திருச்சியிலிருந்து நாகை நோக்கிச் சென்று கொண்டிருந்த வேன் மோதியது.
இதில் செந்தில்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயமடைந்த நாகம்மாள் தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அங்கு உயிரிழந்தார்.
இதுகுறித்து தாலுகா போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கன்னி ராசிக்கு அனுகூலம்: தினப்பலன்கள்!

இந்து முன்னணியினா் கைது

இருமுடி விழா முன்னேற்பாடுகளுக்கான ஆய்வு கூட்டம்

சிறுமியைத் திருமணம் செய்த இளைஞா் மீது வழக்கு

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் இன்று கும்பாபிஷேகம்: பலத்த போலீஸ் பாதுகாப்பு!

SCROLL FOR NEXT