அஞ்சலக சேமிப்போர் ஊக்குவிப்பு விழா
கும்பகோணம் தலைமை அஞ்சலகம் சார்பில் கோட்ட அளவிலான சேமிப்போர் ஊக்குவிப்பு விழா சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
கும்பகோணம் தலைமை அஞ்சலகம் சார்பில் கோட்ட அளவிலான சேமிப்போர் ஊக்குவிப்பு விழா சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு தலைமை அஞ்சலக கண்காணிப்பாளர் எல். துரைசாமி தலைமை வகித்து, பிற நகரங்களில் உள்ள துணை அஞ்சலகங்கள், ஊரகப் பகுதிகளில் உள்ள கிளை அஞ்சலகங்கள் மூலம் கடந்த நிதியாண்டில் செய்த வர்த்தகத்தின் மூலம் கோட்ட அளவில் இலக்கை அடைய முடிந்ததை சுட்டிக் காட்டினார்.
அஞ்சலக துணை கண்காணிப்பாளர் அருள்தாஸ், ஆய்வாளர்கள் சரவணசெல்வன், கார்த்திகேயன் ஆகியோர் வாழ்த்தினர். சேமிப்பு, தொடர் வைப்பு, காப்பீடு திட்டங்களின் கீழ் அதிகளவில் சேமிப்புகளை மேற்கொண்ட அஞ்சல் துறை ஊழியர்கள், அலுவலர்கள் பரிசு வழங்கி கெளரவிக்கப்பட்டனர். மக்கள் தொடர்பு அலுவலர் எஸ். விஜயகுமார் நன்றி கூறினார்.