தஞ்சாவூரில் நாளை நடராசன் படத் திறப்பு
தஞ்சாவூர் தமிழ் அரசி திருமண மண்டபத்தில் புதிய பார்வை ஆசிரியர் ம. நடராசன் படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை (மார்ச் 30) காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது.
தஞ்சாவூர் தமிழ் அரசி திருமண மண்டபத்தில் புதிய பார்வை ஆசிரியர் ம. நடராசன் படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை (மார்ச் 30) காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது.
தமிழுக்காகவும், தமிழ் சமுதாயத்துக்காவும் தொண்டாற்றி வந்த ம. நடராசன் மார்ச் 20-ம் தேதி அதிகாலை மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். அவரது உடல் விளார் கிராமத்தில் முள்ளி வாய்க்கால் முற்றம் எதிரே நல்லடக்கம் செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. நிகழ்ச்சியில் உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர் பழ. நெடுமாறன் தலைமை வகிக்கிறார்.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத் துணைப் பொதுச் செயலர் டி.டி.வி. தினகரன் தொடக்கவுரையாற்றுகிறார். நடராசன் படத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கட்டுப்பாட்டுக் குழுத் தலைவர் ஆர். நல்லகண்ணு திறந்து வைக்கிறார்.
நடராசன் குறித்த மலரை திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி வெளியிட, அதை மன்னார்குடி செங்கமலத்தாயார் மகளிர் கல்லூரித் தாளாளர் வி. திவாகரன் பெற்றுக் கொள்கிறார். இதில், பல்வேறு கட்சித் தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.