ஜெகந்நாதபெருமாள் கோயிலில் நாளை ஸ்ரீசூக்த அஷ்டமி ஹோமம்
கும்பகோணத்தை அடுத்த நாதன்கோவில் ஜெகந்நாதப் பெருமாள் கோயிலில் சுக்ல பட்ச அஷ்டமியை முன்னிட்டு மே 22 ஆம் தேதி ஸ்ரீசூக்த ஹோமம் நடைபெறவுள்ளது.
கும்பகோணத்தை அடுத்த நாதன்கோவில் ஜெகந்நாதப் பெருமாள் கோயிலில் சுக்ல பட்ச அஷ்டமியை முன்னிட்டு மே 22 ஆம் தேதி ஸ்ரீசூக்த ஹோமம் நடைபெறவுள்ளது.
இக்கோயிலில் ஒவ்வொரு வளர்பிறை அஷ்டமியிலும் சுக்ல பட்ச ஸ்ரீசூக்த அஷ்டமி ஹோமம் நடத்தப்படுகிறது. அதன்படி, மே 22-ஆம் தேதி வளர்பிறை அஷ்டமி என்பதால் செண்பகவல்லி தாயாருக்கு காலை ஸ்ரீசூக்த அஷ்டமி ஹோமமும், தொடர்ந்து மூலவர் உற்சவம், திருமஞ்சனம், தாயார் புறப்பாடும் நடைபெற உள்ளது. ஏற்பாடுகளை ஜெகந்நாதப் பெருமாள் கைங்கர்ய சபா மற்றும் கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.