மே 23-இல் மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்
தஞ்சாவூர் மின்நுகர்வோர்களுக்கான குறைதீர் கூட்டம் தஞ்சாவூர் நீதிமன்ற சாலையில் உள்ள செயற்பொறியாளர் அலுவலகத்தில் மே 23-ஆம் தேதி முற்பகல் 11 மணி முதல் 1.30 மணி வரை நடைபெறுகிறது.
தஞ்சாவூர் மின்நுகர்வோர்களுக்கான குறைதீர் கூட்டம் தஞ்சாவூர் நீதிமன்ற சாலையில் உள்ள செயற்பொறியாளர் அலுவலகத்தில் மே 23-ஆம் தேதி முற்பகல் 11 மணி முதல் 1.30 மணி வரை நடைபெறுகிறது.
இதில், தஞ்சாவூர் நகரிய கோட்டத்துக்குள்பட்ட தஞ்சாவூர் தெற்கு வீதி, வடக்கு வீதி, மேல வீதி, கீழ வீதி, கரந்தை, பள்ளியக்ரஹாரம், கீழவாசல், தொல்காப்பியர் சதுக்கம், மேரீஸ் கார்னர், பழைய ஹவுசிங் யூனிட், காந்திஜி சாலை, மருத்துவக்கல்லூரி சாலை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மின்நுகர்வோர் மற்றும் பொதுமக்கள் தங்களது குறைகளை நேரில் மனுவாக அளித்து தீர்வு பெறலாம் என தஞ்சாவூர் மின் நகரிய செயற்பொறியாளர் சீ. கிருஷ்ணவேணி தெரிவித்துள்ளார்.