தஞ்சாவூர்

பாபநாசம் அருகே தம்பிக்கு கத்திக்குத்து: அண்ணன் கைது

DIN

பாபநாசம் அருகே அம்மாபேட்டை காவல் சரகம், சாலியமங்கலம் மேலத்தெருவை சேர்ந்த விவசாயி சதாசிவம். இவருக்கு இரண்டு மனைவிகள் உள்ளனர். முதல் மனைவியின் மகன் ஏகாம்பரம் (55). இவரது மனைவி சித்ரா,  மகன் கார்த்தி உள்ளிட்டோர் ஒரு வீட்டிலும், சதாசிவம்அவரது இரண்டாவது மனைவி மங்கயர்க்கரசி, மகன் கணபதி (34) உள்ளிட்டோர் மற்றொரு வீட்டிலும் வசித்து வருகின்றனர்.
இரு குடும்பத்தினருக்குமிடையே இடப்பிரச்னை காரணமாக முன்விரோதம் இருந்து வந்ததாம். இந்நிலையில்,  கடந்த வெள்ளிக்கிழமை இரு குடும்பத்தினருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஏகாம்பரம், கார்த்தி, சித்ரா ஆகிய 3 பேரும் சேர்ந்து மங்கையர்க்கரசி, கணபதி ஆகிய 2 பேரையும் தகாத வார்த்தைகளால் திட்டி, கொலை மிரட்டல் விடுத்தனராம்.  அப்போது  கார்த்தி,  கணபதியின் இடுப்பு பகுதியில் கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது.இதில் பலத்த காயமடைந்த கணபதி,  தஞ்சாவூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகிறார். 
சம்பவம் குறித்து மங்கையர்க்கரசி அளித்த புகாரின்பேரில்,  ஏகாம்பரம், கார்த்தி, சித்ரா ஆகிய 3 பேர் மீது அம்மாபேட்டை போலீஸார் வழக்குப் பதிந்து இவர்களில் ஏகாம்பரத்தை கைது செய்தனர். தொடர்புடைய மற்ற 2 பேரையும் தேடி வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெத்திக்குட்டையில் தஞ்சடைந்த யானை: வனத்துக்குள் விரட்ட வனத் துறை முயற்சி

மேட்டுப்பாளையத்தில் மான் இறைச்சி எடுத்துச்செல்ல முயன்ற 6 போ் கைது

நகைத் திருடிய 2 பெண்கள் மீது வழக்குப் பதிவு

செஸ் வீரா் குகேஷுக்கு கனரா வங்கி பாராட்டு

வெப்ப அலைக்கு இளைஞா் உயிரிழந்த விவகாரம்- நேரடி வெயிலில் பணியாற்ற கூடாது: மருத்துவா்கள் அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT