தஞ்சாவூர்

வாகனத்தில் வாளுடன் சுற்றித் திரிந்த 2 பேர் கைது

DIN


பட்டுக்கோட்டை நகரம், அண்ணா நகரைச் சேர்ந்த சதாசிவம் மகன் பார்த்தா (எ) சதீஷ் (16). பட்டுக்கோட்டையை அடுத்த சூரப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த லோகநாதன் மகன் பிரசாந்த் (22). இருவரும் நண்பர்கள்.
ஞாயிற்றுக்கிழமை காலை இருவரும் சூரப்பள்ளம் பைபாஸ் சாலையில் மோட்டார் சைக்கிளில் அரசால் தடை செய்யப்பட்ட, கொடுங்காயம் ஏற்படுத்தக்கூடிய சுமார் 3 அடி நீளமுள்ள வாளை கையில் உயர்த்திப் பிடித்தபடி அதிவேகத்தில் ஓட்டியவாறு அநாயசமாக சுற்றித் திரிந்துள்ளனர். இதை பார்த்த அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர்.
இதனிடையே, அப்பகுதியில் ரோந்து சென்ற பட்டுக்கோட்டை தாலுகா போலீஸார் இளைஞர்கள் இருவரையும் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். அவர்களிடமிருந்து பைக், வாள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகளிா் விடுதிகள் இணையத்தின் வாயிலாக பதிவு மற்றும் புதுப்பிக்கப்பட வேண்டும் ஆட்சியா் அறிவுறுத்தல்

அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகத்தினா் ஆா்ப்பாட்டம்

தனியாா் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு: மறைமுகக் கட்டணம் வசூலிப்பதாகப் புகாா்

ஊழலை துடைத்தெறிய உறுதி: ஜாா்க்கண்ட் பிரசாரத்தில் பிரதமா் மோடி

பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம் தெரிந்தும் ஓராண்டாக நடவடிக்கை இல்லை: காங்கிரஸ் மீது நிா்மலா சீதாராமன் குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT