பேராவூரணியில் காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வுப் பேரணி மற்றும் ஒட்டுமொத்த தூய்மைப் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பேராவூரணி பேரூராட்சி மற்றும் பொதுசுகாதாரத் துறை சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வுப் பேரணிக்கு வட்டார மருத்துவ அலுவலர் வி.செளந்தரராஜன் தலைமை வகித்தார்.
பேரூராட்சி செயல் அலுவலர் மு.பொன்னுசாமி முன்னிலை வகித்தார். பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் மா.கோவிந்தராசு பேரணியை தொடங்கி வைத்தார். பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் ஐ.மகாலட்சுமி, பேராவூரணி வட்டாட்சியர் எல்.பாஸ்கரன், ஊராட்சி ஒன்றிய ஆணையர் சடையப்பன், மருத்துவர் தீபா, காவல் ஆய்வாளர் கே.பரமானந்தம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். காந்திபூங்காவில் தொடங்கிய பேரணி புதிய பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது.
தொடர்ந்து, மாவட்டத்தின் பிற பகுதிகளில் இருந்து வரவழைக்கப்பட்ட துப்புரவு பணியாளர்கள் ஒட்டுமொத்த துப்புரவுப் பணி மேற்கொண்டனர்.
காய்ச்சல் தடுப்பு மற்றும் ஒட்டுமொத்த துப்புரவு பணியையொட்டி மருத்துவ முகாம், பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது.