தஞ்சாவூர்

மருத்துவமனையில் கர்ப்பிணியிடம் ரூ.1.35 லட்சம் திருட்டு

DIN

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகேயுள்ள பூப்பட்டியைச் சேர்ந்தவர் கண்ணன் (33). தொழிலாளி. இவரது மனைவி கனகா கர்ப்பிணியாக உள்ளார். இவர் சிகிச்சைக்காக தஞ்சாவூர் புதுக்கோட்டை சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அண்மையில் சேர்க்கப்பட்டார். இவரது அறுவை சிகிச்சைக்காக வைக்கப்பட்டிருந்த ரொக்கப் பணம், கொலுசு, செல்லிடப்பேசி, கைக்கடிகாரம் ஆகியவற்றை பையில் வைத்து, தலையணைக்குக் கீழே கனகா திங்கள்கிழமை இரவு வைத்திருந்தார். செவ்வாய்க்கிழமை காலை எழுந்து பார்த்தபோது பையைக் காணவில்லை. 
இதுகுறித்து தமிழ்ப் பல்கலைக்கழக போலீஸார் விசாரித்தனர். இதில், செவ்வாய்க்கிழமை அதிகாலை மர்ம நபர் மருத்துவமனையில் உள்ள இரு கண்காணிப்பு கேமராக்களை துணியால் மூடிவிட்டு, கனகா தூங்கிக் கொண்டிருந்தபோது, அவரது பணப் பையைத் திருடிச் சென்றிருப்பது தெரிய வந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

பார்வை ஒன்றே போதுமே... ஸ்ரேயா சரண்!

கோடை வெயிலின் தாக்கம் எதிரொலி: 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்காது!

டேவிட் வார்னரின் சாதனையை சமன் செய்த விராட் கோலி!

காங். ஆட்சியில் மத அடிப்படையிலான இடஒதுக்கீட்டை அமல்படுத்த திட்டம் -பிரதமர் மோடி பிரசாரம்

SCROLL FOR NEXT