தஞ்சாவூர்

ஆசிரியர் வீட்டில் பூட்டை உடைத்து திருட்டு

DIN

தஞ்சாவூர் அருகே நாஞ்சிக்கோட்டை சாலை ஆசிரியர் காலனி விரிவாக்கப் பகுதியைச் சேர்ந்தவர் திரனேந்திரன் (40). இவர் ஒரத்தநாடு அருகேயுள்ள மேல உளூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழ் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். இவர் செப். 17-ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு காசவளநாடுபுதூரில் நிகழ்ந்த துக்க நிகழ்வுக்காகச் சென்றார். 
மீண்டும் இவர் செவ்வாய்க்கிழமை இரவு வீட்டுக்குத் திரும்பினார். அப்போது, முன்பக்கக் கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டுக் கிடந்தது. மேலும், பீரோவில் இருந்த 5 பவுன் தங்கச் சங்கிலி, முக்கால் கிலோ எடையுள்ள வெள்ளிப் பொருட்கள் திருட்டு போயிருப்பது தெரிய வந்தது. தமிழ்ப் பல்கலைக்கழக போலீஸார் விசாரிக்கின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு: இன்றைய நிலவரம்!

வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்: வாக்களித்தப் பின் அமித் ஷா பேட்டி

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

SCROLL FOR NEXT