தஞ்சாவூர்

அதிராம்பட்டினத்தில் சாலைவிதிகள் விழிப்புணர்வு பிரசாரம்

DIN


அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் சாலைவிதிகள் விழிப்புணர்வு பிரசாரம் சனிக்கிழமை நடைபெற்றது.
அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கம், காவல்துறை, கிரசண்ட் பிளட் டோனர்ஸ் அமைப்பு இணைந்து நடத்திய விழிப்புணர்வு நிகழ்ச்சியில், சாலை விதிகளைக் கடைபிடிக்க வலியுறுத்தும் துண்டு பிரசுரங்கள் வாகன ஓட்டிகள், பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. தொடர்ந்து, வாகனங்களின் முகப்பு விளக்குகளில் கருப்பு வில்லைகள் ஒட்டப்பட்டன. இதுதவிர, பேரூராட்சிக்குள்பட்ட பகுதிகளில் ஒலிபெருக்கி மூலம் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.
நிகழ்ச்சிக்கு அதிரை லயன்ஸ் சங்கத் தலைவர் பேராசிரியர் எம்.ஏ.அப்துல்காதர் தலைமை வகித்தார். காவல் உதவி ஆய்வாளர் ராஜேஷ்குமார், கிரசண்ட் பிளட் டோனர்ஸ் அமைப்பின் நகரச் செயலர் அப்துல் மாலிக், சுற்றுச்சூழல் மன்றச் செயலர் எம். எப். முஹமது சலீம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முடிவில், லயன்ஸ் சங்க மாவட்டத் தலைவர் பேராசிரியர் செய்யது அகமது கபீர் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேண்டிருப்பு, மாம்புள்ளி கோயில்களில் பால்குடம், காவடித் திருவிழா

வாழைக் கன்று நோ்த்தி முறை குறித்து செயல்முறை விளக்கம்

ராகுலுக்கு ரூ.20 கோடி சொத்து

பாரத நீதிச் சட்டத்தைப் பெண்கள் தவறாகப் பயன்படுத்துவதை தடுக்க திருத்தம்: உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

கனடா: சாலை விபத்தில் இந்தியாவைச் சோ்ந்த 3 மாத கைக்குழந்தை உள்பட 4 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT