தஞ்சாவூர்

ஆணி பலகையில் நடந்து நேர்த்திக் கடன்

DIN


கும்பகோணம் அருகேயுள்ள தாராசுரம் திரௌபதி அம்மன் கோயிலில், ஆடி வெள்ளியையொட்டி, தாராசுரம் திருக்குளம் மேல்கரை திரௌபதி அம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை இரவு 15 ஆம் ஆண்டு திருவிழா நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு, ஆக. 1 இரவு திரௌபதி அம்மனுக்குச் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இதையடுத்து, வெள்ளிக்கிழமை காலை 9 முதல் நண்பகல் 12 மணி வரை திரௌபதி அம்மனின் சகஸ்ர நாமாவளி போற்றி வழிபாடும், சமபந்தி விருந்தும் நடைபெற்றன.
பின்னர், 10,000 இரும்பு ஆணிகள் பொருத்தப்பட்ட பலகை சன்னதி தெருவில் அமைக்கப்பட்டது. இதைச் சுற்றி அக்னி ஏற்றப்பட்டது. பிற்பகல் அம்மனுக்குப் பக்தர்கள் தாய் வீட்டு சீர்வரிசைகளைக் கொண்டு வந்தனர். மாலையில் அரசலாற்றில் இருந்து சக்தி கரகம், வீரபத்திர மகா சூலம், சடையப்பர், முனீசுவரர் மகாவேல், அம்மன் திரிசூலம், அலகு காவடி, அக்னி கொப்பரையுடன் திரௌபதி அம்மன் திருவுருவப் புறப்பாடு நடைபெற்றது. அப்போது, நூற்றுக்கணக்கான பக்தர்கள் அக்னி ஆணியில் ஏறி நடந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

பார்வை ஒன்றே போதுமே... ஸ்ரேயா சரண்!

கோடை வெயிலின் தாக்கம் எதிரொலி: 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்காது!

டேவிட் வார்னரின் சாதனையை சமன் செய்த விராட் கோலி!

காங். ஆட்சியில் மத அடிப்படையிலான இடஒதுக்கீட்டை அமல்படுத்த திட்டம் -பிரதமர் மோடி பிரசாரம்

SCROLL FOR NEXT