தஞ்சாவூர்

பாபநாசம் அருகே மாட்டு வண்டிகளில் மணல் அள்ள அனுமதிக்க கோரி மறியல் போராட்டம்

DIN

பாபநாசம் அருகே கொள்ளிடம் ஆற்றில் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்ட அரசு  மணல் குவாரியில் மாட்டு வண்டிகளில் மணல் அள்ள அனுமதிக்க வேண்டும்  என  கோரி செவ்வாய்க்கிழமை மறியல் போராட்டம் நடைபெற்றது.
பாபநாசம் வட்டம், தேவனோடை கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றில் செவ்வாய்க்கிழமை அரசு மணல் குவாரி திறக்கப்பட்டது. இங்கு மாட்டு வண்டிகளும் மணல் அள்ள அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி மாட்டுவண்டி தொழிலாளர்கள் சங்கத் தலைவரும் டி.ஐ.சி.யூ. மாவட்ட செயலாளருமான சி. ஜெயபால் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட மாட்டுவண்டி தொழிலாளர்கள்  மணல் குவாரியை முற்றுகையிட்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பாபநாசம் வட்டாட்சியர் கண்ணன், பொதுப் பணித் துறை நிர்வாக பொறியாளர் மற்றும் காவல் துறையினர் 
மறியல் போராட்டத்தில் ஈடுபட்டோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 
இதில், வெள்ளிக்கிழமை கும்பகோணம் பொதுப்பணித் துறை அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தி மாட்டு வண்டிகளும் மணல் அள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்படும்  என உறுதியளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பவானிசாகா் அணையில் இருந்து வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்கக் கோரிக்கை

வேளாண் சிறப்பு அதிகாரி பணி தோ்வில் வெற்றி பெற்றவா்களுக்கு பாராட்டு

‘முதல்வரின் மாநில இளைஞா் விருது’: மே 1-15 வரை விண்ணப்பிக்க வாய்ப்பு

போா் நிறுத்த திட்டத்துக்கு ஒப்புதல்: ஹமாஸிடம் அமெரிக்கா வலியுறுத்தல்

வாழைத்தாா் உறையிடுதல்: வேளாண் மாணவா்கள் செயல்விளக்கம்

SCROLL FOR NEXT