தஞ்சாவூர்

வீட்டில் மதுபாட்டில்களை மறைத்து வைத்திருந்த பெண் கைது

DIN

பட்டுக்கோட்டை அருகே வீட்டில் மதுபான பாட்டில்களை மறைத்து வைத்திருந்த பெண் கைது செய்யப்பட்டார்.
 பட்டுக்கோட்டையை அடுத்த கரம்பயம் கிளாமங்களத்தார் தெருவில் வசிப்பவர் பாஸ்கர் மனைவி ராஜேஸ்வரி (47). இவர் தனது வீட்டில் சட்ட விரோதமாக மதுபானங்கள் விற்பனை செய்வதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
 இதன்பேரில், பட்டுக்கோட்டை தாலுகா காவல் நிலைய போலீஸார் செவ்வாய்க்கிழமை ராஜேஸ்வரி வீட்டில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அவர் வீட்டின் கொல்லைப்புறத்தில் 180 மில்லி அளவுள்ள 10 மதுபான பாட்டில்கள் விற்பனை செய்வதற்காக மறைத்து வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்த போலீஸார், இதுகுறித்து வழக்குப் பதிந்து ராஜேஸ்வரியை கைது செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

9-ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டுத் தற்கொலை

ஐஏஎஸ் தோ்வில் வென்றவருக்கு என்.ஐ. உயா்கல்வி மையம் சாா்பில் பாராட்டு

சூரியன்விளை பத்ரகாளி கோயிலில் நட்சத்திர மகா யாகம்

சட்ட தன்னாா்வல தொண்டா் பணிக்கு மே 20-க்குள் விண்ணப்பிக்கலாம்

தோவாளை - தாழக்குடி இடையே சாலைப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

SCROLL FOR NEXT