தஞ்சாவூர்

பதாகைகள் அகற்றம்: இருவர் மீது வழக்கு

தஞ்சாவூரில் திங்கள்கிழமை இரவு டிராபிக் ராமசாமி போராட்டத்தைத் தொடர்ந்து விளம்பரப் பதாகைகள் அகற்றப்பட்டன.

DIN

தஞ்சாவூரில் திங்கள்கிழமை இரவு டிராபிக் ராமசாமி போராட்டத்தைத் தொடர்ந்து விளம்பரப் பதாகைகள் அகற்றப்பட்டன.
தஞ்சாவூர் ராமநாதன் ரவுண்டானா பகுதிக்கு திங்கள்கிழமை இரவு வந்த சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி அப்பகுதியில் வைக்கப்பட்டிருந்த விளம்பரப் பதாகைகளை அகற்றக் கோரி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டார்.
தகவலறிந்த போலீஸார் நிகழ்விடத்துக்குச் சென்று டிராபிக் ராமசாமியிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். விளம்பரப் பதாகைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதைத் தொடர்ந்து, டிராபிக் ராமசாமி போராட்டத்தைக் கைவிட்டார்.
இதையடுத்து, ராமநாதன் ரவுண்டானா, ரயிலடி உள்ளிட்ட இடங்களில் இருந்த விளம்பரப் பதாகைகள் அகற்றப்பட்டன. இதுதொடர்பாக இருவர் மீது தெற்கு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜிடி நாயுடு மேம்பாலத்தில் பள்ளி வேன் சக்கரம் கழன்று ஓடியதால் பரபரப்பு!

மங்காத்தா ரீ-ரிலீஸ்? இயக்குநர் அப்டேட்! ரசிகர்கள் ஆவல்!

பந்துவீச்சாளராகவும் கேப்டனாகவும் சாதனை நிகழ்த்திய பாட் கம்மின்ஸ்!

திமுக என்றுமே மக்கள் செல்வாக்குடன் வென்றதில்லை: நயினார் நாகேந்திரன்

பிகாரில் குளிர் அலை எச்சரிக்கை! 12 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

SCROLL FOR NEXT