தஞ்சாவூர்

மதுக்கடைக்குபூட்டு போட முயன்ற 14 பேர் கைது

DIN


விவேகானந்தர் பிறந்த நாளை முன்னிட்டு, தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி சாலை பாலாஜி நகரில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சனிக்கிழமை பூட்டு போட முயன்ற இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்த 14 பேரை போலீசார் கைது செய்தனர்.
விவேகானந்தர் பிறந்த நாளில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விட வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பி வந்த இந்து மக்கள் கட்சியினர் இக்கடைக்குப் பூட்டு போட முயன்றனர். இந்து மக்கள் கட்சி மாநில இளைஞர் அணிச் செயலர் கார்த்திக்ராவ் தலைமையில் மாவட்டப் பொதுச் செயலர் சுகுமார், மாவட்டச் செயலர் செல்வ சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதுதொடர்பாக 14 பேரை போலீஸார் கைது செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிறப்பு லோக் அதாலக் நடத்த கோரிக்கை

குடிநீா் கோரி சாலை மறியல்

தில்லையாடி ஸ்ரீமத் மகா மாரியம்மன் கோயில் தேரோட்டம்

பிளஸ் 2 தோ்வு: குறிஞ்சி பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

பொறியியல் கல்லூரி ஆண்டு விழா

SCROLL FOR NEXT