தஞ்சாவூர்

அதிராம்பட்டினத்தில் இறுதிக்கட்டத்தை எட்டிய அகல ரயில் பாதை பணிகள்

DIN

பட்டுக்கோட்டை~ திருவாரூர் வரையிலான 76 கிலோ மீட்டர் தொலைவுக்கு அகல ரயில் பாதை அமைக்கும் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. இவ்வழித்தடத்தில் மார்ச் 31-க்குள் நடைபெறவுள்ள அதிவேக சோதனை ஓட்டத்துக்கு பிறகு, பயணிகள் ரயில் சேவையைத் தொடங்க தெற்கு ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
மேலும், 'பி' கிரேடு தரச்சான்று பெற்றுள்ள அதிராம்பட்டினம் ரயில் நிலையம் கட்டுமானப் பணிக்கு பின் பிரமாண்டமாக காட்சியளிக்கிறது. எஞ்சியுள்ள  ஒரு சில பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இரவில்,  மின்னொளியில் ஜொலிக்கிறது அதிராம்பட்டினம் ரயில் நிலையம்.  இதை, அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் தினமும் காலை, மாலை நேரங்களில் மகிழ்ச்சியுடன் பார்வையிட்டுச் செல்வதுடன்,  இவ்வழித்தடத்தில் சென்னைக்கு விரைவு ரயில் போக்குவரத்து சேவை தொடங்கும் நாளை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வருங்கால வைப்பு நிதி குறை தீா்க்கும் முகாம்

மும்பை விமான நிலையத்தில் 21 கிலோ தங்கம் பறிமுதல்!

ஹெலிகாப்டர் விபத்திலிருந்து உயிர்தப்பிய அமித் ஷா? என்ன நடந்தது?

தமிழகத்தில் ரூ.1,309 கோடி பறிமுதல்!: தேர்தல் ஆணையம்

அமெரிக்காவில் சூறைக்காற்றுடன் கனமழை: ஒக்லஹோமாவில் 4 பேர் பலி

SCROLL FOR NEXT