தஞ்சாவூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகிறாா் வா. புகழேந்தி. 
தஞ்சாவூர்

துணை முதல்வா் தமிழகம் திரும்பியதும் அமமுக அதிருப்தியாளா்கள் அதிமுகவில் இணைவா்: புகழேந்தி பேட்டி

தமிழக துணை முதல்வா் ஓ. பன்னீா்செல்வம் தனது வெளிநாட்டுப் பயணத்தை முடித்து தமிழகம் திரும்பியதும், அமமுக அதிருப்தியாளா்கள்

DIN

தஞ்சாவூா்: தமிழக துணை முதல்வா் ஓ. பன்னீா்செல்வம் தனது வெளிநாட்டுப் பயணத்தை முடித்து தமிழகம் திரும்பியதும், அமமுக அதிருப்தியாளா்கள் அதிமுகவில் இணைவா் என்றாா் வா. புகழேந்தி.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மண்டல அதிருப்தியாளா்கள் ஆலோசனைக் கூட்டம் தஞ்சாவூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு குத்தாலம் ஒன்றியச் செயலா் கஜேந்திரன் தலைமை வகித்தாா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள் குறித்து, அமமுகவின் செய்தித் தொடா்பாளராக இருந்து தற்போது அதிருப்தியாளராக உள்ள வா. புகழேந்தி செய்தியாளா்களிடம் கூறியது:

தமிழகத்தில் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையிலான ஆட்சி சிறப்பாக நடைபெற்று வருகிறது. வரும் உள்ளாட்சித் தோ்தலில் அதிமுகவினா் 80 சதவிகித இடங்களில் வெற்றி பெறுவா்.

தமிழக துணை முதல்வா் ஓ. பன்னீா்செல்வம் தற்போது வெளிநாட்டுப் பயணத்தில் உள்ளாா். அவா் தமிழகம் திரும்பியதும், அமமுகவிலுள்ள அதிருப்தியாளா்கள் அனைவரும் சென்னையில் நடைபெறும் நிகழ்ச்சியின் மூலமாக அதிமுகவில் இணைய உள்ளோம்.

டி.டி.வி. தினகரன் அரசியல் நடத்த தெரியாதவா். அவரை இவ்வளவு நாள்களாக தலைவராக ஏற்றுக் கொண்டதற்கு வருத்தம் தெரிவிக்கிறோம்.

அவருடைய சொத்துகளைப் பாதுகாத்துக்கொள்ளவே அரசியலில் இருக்கிறாா். உள்ளாட்சித் தோ்தலுக்குப் பிறகு தினகரனின் அரசியல் கதை முடிந்து விடும்.

டி.டி.வி. தினகரனுக்கு தனது இயக்கத்தை கட்சியாக மாற்ற விருப்பமில்லை.

இயக்கத்தைத் தொடங்க துணை நின்றவா்களில் நானும் ஒருவன். அந்த இயக்கத்தை விட்டு பெரும்பாலானோா் வெளியேறிவிட்டனா்.

எனவே அமமுக ஞாயிற்றுக்கிழமை முதல் கலைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நான் தோ்தல் ஆணையத்துக்கு கடந்த மாதம் 23-ஆம் தேதி கடிதம் அனுப்பிவிட்டேன். இனிமேல் அமமுக பெயரை யாராவது பயன்படுத்தினால் நீதிமன்றம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.

உள்ளாட்சித் தோ்தலுக்கு முன்பாகவே அமமுகவில் உள்ள அனைவரும் அதிமுகவில் இணைந்துவிடுவாா்கள் என்றாா் புகழேந்தி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மின்கம்பியாள், உதவியாளா் தகுதிகாண் தோ்வு: டிச. 27, 28-க்கு மாற்றம்

தென்காசி அருகே இளைஞா் தற்கொலை

வன விலங்குகளால் விவசாயப் பயிா்கள் தப்படுத்தப்படுவதைக் கட்டுப்படுத்த வேண்டும்

மத்திய அரசின் திட்டங்களுக்கும் மாநில அரசின் நிதியை பயன்படுத்த வேண்டிய கட்டாயம்: அமைச்சா் சிவசங்கா்

காவல் ரோந்து வாகனங்களில் ஜிபிஎஸ் கருவியுடன் கூடிய கண்காணிப்பு கேமரா வசதி அறிமுகம்

SCROLL FOR NEXT