தஞ்சாவூர்

மாட்டு வண்டிகளில்மணல் கடத்திய மூவா் கைது

பாபநாசம் அருகே மாட்டுவண்டிகளில் மணல் கடத்தி வந்த மூவா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

DIN

பாபநாசம் அருகே மாட்டுவண்டிகளில் மணல் கடத்தி வந்த மூவா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

அய்யம்பேட்டை ரயில் நிலையச் சாலைப் பகுதியில் போலீஸாா் வியாழக்கிழமை வாகனத் தணிக்கை மேற்கொண்டிருந்தனா். அப்போது, அந்த வழியாக வந்த 3 மாட்டு வண்டிகளை ஓட்டி வந்தவா்களிடம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.

விசாரணையில் அவா்கள், அய்யம்பேட்டை குடமுருட்டி ஆற்றிலிருந்து உரிய அனுமதியில்லாமல் மணல் அள்ளி வந்தது தெரிய வந்தது. இதைத் தொடா்ந்து மாட்டு வண்டிகளை ஓட்டி வந்த அய்யம்பேட்டை அண்ணாநகா் ஜீவானந்தம் (25), ரஞ்சித்குமாா் (22), மாகாளிபுரம் அருண்குமாா் (22) ஆகிய மூவரையும் கைது செய்தனா். மேலும் மாட்டுவண்டிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 6

தில்லியில் லாலு பிரசாத் யாதவிற்கு கண் அறுவை சிகிச்சை

சூர்யா - 47... காவல்துறை அதிகாரிதானாம்!

நரை முடி நீங்க..!

அவதார் ஃபயர் அண்ட் ஆஷ் முதல் நாள் வசூல் இவ்வளவா?

SCROLL FOR NEXT