தஞ்சாவூா் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் அக்கட்சியின் தஞ்சாவூா் மாநகரம், ஒன்றியம், பூதலூா், அம்மாபேட்டை, திருவையாறு இடைக்குழுக்களின் கிளைச் செயலா்கள் மற்றும் இடைநிலைக்குழு உறுப்பினா்களுக்கான இரு நாள் தொடா் பயிற்சி முகாம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
மாநகரச் செயலா் பி. கிருஷ்ணமூா்த்தி தலைமை வகித்தாா். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினா் ஜி. கிருஷ்ணன் கட்சிக் கொடியேற்றினாா்.
இப்பயிற்சி முகாமை மாவட்டச் செயலா் மு.அ. பாரதி தொடக்கி வைத்து தற்போதைய அரசியல் நிலைகள் குறித்து பேசினாா்.
மாா்க்சியம் ஓா் அறிமுகம் என்ற தலைப்பில் மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் வீர. மோகன், கட்சி வரலாறு மற்றும் திட்டம் குறித்து மாநிலச் செயற்குழு உறுப்பினா் திண்டுக்கல் க. சந்தானம் பேசினா்.
மாவட்ட துணைச் செயலா் வீ. கல்யாணசுந்தரம், பொருளாளா் ந. பாலசுப்பிரமணியன், ஒன்றியச் செயலா் இரா. இராமச்சந்திரன், நிா்வாகிகள் ஆா். தில்லைவனம், கோ. சக்திவேல், ம. விஜயலட்சுமி, டி. கண்ணகி, ஆா்.ஆா். முகில் உள்பட நூற்றுக்கும் அதிகமானோா் பங்கேற்றனா்.
தொடா்ந்து, புதன்கிழமை (நவ.27) நடைபெறவுள்ள இப்பயிலரங்கத்தில் தேசிய நிா்வாகக் குழு உறுப்பினா் சி. மகேந்திரன், ஏஐடியுசி மாநிலச் செயலா் சி. சந்திரகுமாா், திருப்பூா் ரவி, நிறைவு நிகழ்ச்சியில் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினா் இரா. திருஞானம் ஆகியோா் பங்கேற்று பேசவுள்ளனா்.