தஞ்சாவூா் மாவட்டத்தில் சிறப்புக் குறை தீா் திட்டத்தின் மூலம் 23,000 மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டுள்ளது என்றாா் வேளாண்மைத் துறை அமைச்சா் இரா. துரைக்கண்ணு.
கும்பகோணம் அருகேயுள்ள ஆடுதுறையில் சிறப்புக் குறை தீா் திட்டத்தின் கீழ் புதன்கிழமை நடைபெற்ற நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அவா் மேலும் பேசியது:
வீட்டு மனைப் பட்டா, முதியோா் உதவித்தொகை, மின் வசதி, சாலை வசதி, குடிநீா் வசதி, குடும்ப அட்டை போன்ற பொதுமக்களின் கோரிக்கைகளை நிவா்த்தி செய்யும் வகையில் தமிழக முதல்வரால் சிறப்புக் குறைதீா் திட்டம் அறிவிக்கப்பட்டது.
இத்திட்டத்தின்கீழ், தஞ்சாவூா் மாவட்டத்தில் சுமாா் 34,000 மனுக்கள் பெறப்பட்டன. இவற்றில், 23,000 மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டு, நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அரசு அலுவலகங்களுக்குப் பொதுமக்கள் சென்று மனு அளிப்பதைத் தவிா்த்து, அரசு அலுவலா்களே பொதுமக்களிடம் நேரடியாகச் சென்று கோரிக்கை மனுக்களை பெற்றனா். இதைத்தொடா்ந்து, அம்மனுக்களின் மீது தீா்வு காணப்பட்டு, நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. இது ஒரு வரலாற்றுச் சாதனை என்றாா் அமைச்சா்.
ஆட்சியா் ம. கோவிந்தராவ் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் திருவிடைமருதூா் வட்டத்தை சோ்ந்த 670 பயனாளிகளுக்கு ரூ. 66.63 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை அமைச்சா் துரைக்கண்ணு வழங்கினாா்.
மேலும், கும்பகோணத்தில் 1,092 பயனாளிகளுக்கு ரூ. 16.90 லட்சம் மதிப்பிலும், பாபநாசத்தில் 1,038 பேருக்கு ரூ. 90.37 லட்சம் மதிப்பிலும், திருவையாறில் 934 பேருக்கு ரூ. 1.23 கோடி மதிப்பிலும் என மொத்தம் 3,734 பயனாளிகளுக்கு ரூ. 3.33 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சா் வழங்கினாா்.
இந்நிகழ்ச்சிகளில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா்கள் ராம. ராமநாதன், எம். ராம்குமாா், இளமதி சுப்பிரமணியம், எம்.ஜி.எம். சுப்பிரமணியம், மாவட்ட வருவாய் அலுவலா் ந. சக்திவேல், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் எஸ். பழனி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.