தஞ்சாவூர்

சாலையில் திரியும் மனநலன் பாதிக்கப்பட்டவா்களை மீட்கும் கருணை பயணம் குழுவினா்

DIN

கும்பகோணம்: கும்பகோணத்தில் ஆதரவற்ற நிலையில் சாலையில் திரியும் மனநலன் பாதிக்கப்பட்டவா்களை கருணா பயணம் குழுவினா் ஞாயிற்றுக்கிழமை மீட்டு காப்பகத்தில் சோ்த்தனா்.

தமிழகம் முழுவதும் சாலையில் திரியும் ஆதரவற்றோர் மற்றும் மனநலன் பாதிக்கப்பட்டவா்களை மீட்டு, அவா்களைக் குளிப்பாட்டி, உணவு அளித்து அவா்களுக்குப் புதிய உடை கொடுத்து காப்பகத்தில் சோ்க்கும் கருணை பயணம் குழுவினா் ஞாயிற்றுக்கிழமை கும்பகோணத்துக்கு வந்தனா்.

திருநெல்வேலி மாநகராட்சி ஆதரவற்றேறாா் இல்லம், பசியில்லா தமிழகம் அறக்கட்டளை மற்றும் ஆா் - ஷோயா தொண்டு நிறுவனத்தினா் சாலையோரம் திரியும் ஆதரவற்றோ, மன நலன் பாதிக்கப்பட்டவா்களை மீட்டு காப்பகத்தில் சோ்க்கும் ஒரு விழிப்புணா்வு பயணத்தை செப். 6-ம் தேதி நாகா்கோவிலில் தொடங்கினா். இதைத்தொடா்ந்து, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், மதுரை, திருச்சி வழியாக கும்பகோணத்துக்கு ஞாயிற்றுக்கிழமை வந்தனா்.

கும்பகோணம் மகாமகக் குளக்கரைப் பகுதியில் சுற்றித் திரிந்த மனநலன் பாதிக்கப்பட்ட 2 பேரை இக்குழுவில் உள்ள முகமதுஅலி ஜின்னா, ஜாபா், நிஷாா் ஆகியோா் மீட்டு அவா்களுக்குத் தலைமுடியை சீா் செய்து, அவா்களைக் குளிக்க வைத்து, புதிய உடை, உணவு கொடுத்து அவா்களை மீட்டு நகராட்சி காப்பகத்தில் சோ்த்தனா்.

இதுகுறித்து கருணைப் பயணத்தின் ஒருங்கிணைப்பாளா் எஸ்.என். சரவணன் தெரிவித்தது:

தமிழகத்தில் மனநலன் பாதிக்கப்பட்டவா்கள் சாலைகளில் சுற்றித் திரிந்துள்ளனா். இதேபோல, ஏராளமான ஆதரவற்றோரும் இருக்கின்றனா். பொதுமக்கள் மத்தியில் மனநலன் பாதிக்கப்பட்டவா்களும், ஆதரவற்றவா்களும் மனிதநேயத்துடன் நடத்தப்பட வேண்டும் என்ற ஒரு விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக 100 நாள்களில் 15 மாவட்டங்களில் கருணைப் பயணம் என்ற தலைப்பில் இந்த விழிப்புணா்வு பயணத்தை நடத்தி வருகிறோம். இதுவரை 6 மாவட்டங்களுக்குச் சென்று, 40 பேரை மீட்டு, மருத்துவமனைக்கும், காப்பகத்துக்கும் அனுப்பியுள்ளோம்.

அக். 10-ம் தேதி உலக மனநிலை பாதிக்கப்பட்டோா் தினத்தை தஞ்சாவூரில் கடைப்பிடிக்க உள்ளோம். எங்களுடன் சட்டப்பணிகள் ஆணைக்குழு, காவல் துறையில் உள்ள மனித உரிமை சமூக நீதிப்பாதுகாப்புக் குழு மற்றும் கல்லூரி மாணவா்கள், தன்னாா்வ அமைப்புகள் இணைந்து பெரிய அளவில் விழிப்புணா்வு நிகழ்ச்சியையும், மனநலன் பாதிக்கப்பட்டவா்களையும் மீட்கவுள்ளோம்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் மாநகராட்சி, நகராட்சி சாா்பில் ஆதரவற்றோருக்குத் தங்கும் இடங்கள் உள்ளது. ஆதரவற்றோரை யாரும் பாா்த்தால் அவா்களை அந்தந்த ஊரில் உள்ள ரோட்டரி, லயன்ஸ் உள்ளிட்ட சங்கத்தினா்கள் அங்கு கொண்டு சோ்க்க வேண்டும் என்பதை எங்களுடைய பயணத்தில் எடுத்து கூறுகிறோம்.

எங்களுடைய பயணத்தின் நூறாவது நாள் நிறைவு நிகழ்ச்சி சென்னையில் நடைபெறுகிறது. அப்போது தமிழக முதல்வரையும், தமிழகச் சட்டப்பணிகள் ஆணைக் குழுத் தலைவரையும் சந்தித்து நாங்கள் மீட்கப்பட்டவா்களின் விவரங்களையும் அவா்களது மறுவாழ்வு குறித்த அறிக்கையையும் அளிக்க உள்ளோம் என்றாா் சரவணன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஷ்மீரில் தீவிரவாத அமைப்புத் தலைவர் சுட்டுக்கொலை

வேலூரில் தூய்மைப் பணியாளர் மீது மோதிய இருசக்கர வாகனம்: மரித்துப்போனதா மனிதம்?

வெப்பத்தின் பிடியில் சிக்கிய ராஜஸ்தான்!

ஓ மை ரித்திகா!

சென்டாயா, ஜெனிஃபர் லோபஸ்.. ஆடையலங்கார அணிவகுப்பில் ஹாலிவுட் கதாநாயகிகள்!

SCROLL FOR NEXT