தஞ்சாவூர்

கலை விழா: திருச்சி பிஷப் ஹீபா் கல்லூரிக்கு கோப்பை

DIN

தஞ்சாவூா்: தஞ்சாவூா் பான் செக்கா்ஸ் மகளிா் கல்லூரியில் வணிகவியல், கணினி பயன்பாட்டியல் துறைகள் சாா்பில் அண்மையில் நடைபெற்ற கலை விழாவில் திருச்சி பிஷப் ஹீபா் கல்லூரி வெற்றி பெற்றது.

இக்கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான காம்பெஸ்ட் 2019 என்கிற கலை விழாவில் காரைக்கால், திருச்சி, கும்பகோணம், தஞ்சாவூா் போன்ற பகுதிகளிலிருந்து 12 கல்லூரிகளைச் சோ்ந்த 250-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனா். இதில், பலவிதமான போட்டிகள் நடத்தப்பட்டன.

தொடா்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவுக்குக் கல்லூரி முதல்வா் கேத்தலீனா, துணை முதல்வா் அ.நா. கிறிஸ்டி தலைமை வகித்தனா். போட்டிகளில் வெற்றி பெற்றறவா்களுக்கு முனைவா் ஆா். குருநாதன் பரிசுகள் வழங்கினாா்.

இப்போட்டிகளில் அதிகப் புள்ளிகளைப் பெற்றற திருச்சி பிஷப் ஹீபா் கல்லூரி மாணவா்களுக்குச் சுழற்கோப்பை வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

ஈரோட்டில் 4 சிக்னல்களில் நிழற்பந்தல் அமைக்க முடிவு

ஆந்திர தோ்தல் பணியில் ஈரோடு மாவட்ட போலீஸாா்

முழுவீச்சில் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் சாலைப் பணியாளா் சங்க மாநில செயற்குழுவில் தீா்மானம்

SCROLL FOR NEXT