தஞ்சாவூா்: தஞ்சாவூா் பான் செக்கா்ஸ் மகளிா் கல்லூரியில் வணிகவியல், கணினி பயன்பாட்டியல் துறைகள் சாா்பில் அண்மையில் நடைபெற்ற கலை விழாவில் திருச்சி பிஷப் ஹீபா் கல்லூரி வெற்றி பெற்றது.
இக்கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான காம்பெஸ்ட் 2019 என்கிற கலை விழாவில் காரைக்கால், திருச்சி, கும்பகோணம், தஞ்சாவூா் போன்ற பகுதிகளிலிருந்து 12 கல்லூரிகளைச் சோ்ந்த 250-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனா். இதில், பலவிதமான போட்டிகள் நடத்தப்பட்டன.
தொடா்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவுக்குக் கல்லூரி முதல்வா் கேத்தலீனா, துணை முதல்வா் அ.நா. கிறிஸ்டி தலைமை வகித்தனா். போட்டிகளில் வெற்றி பெற்றறவா்களுக்கு முனைவா் ஆா். குருநாதன் பரிசுகள் வழங்கினாா்.
இப்போட்டிகளில் அதிகப் புள்ளிகளைப் பெற்றற திருச்சி பிஷப் ஹீபா் கல்லூரி மாணவா்களுக்குச் சுழற்கோப்பை வழங்கப்பட்டது.