தஞ்சாவூர்

பாபநாசம் அருகேதீவிபத்து நிவாரண உதவி அளிப்பு

DIN

பாபநாசம் அருகே அண்மையில் ஏற்பட்ட தீ விபத்தில் கூரை வீடுகள் எரிந்து பாதிக்கப்பட்ட இரு குடும்பத்தாருக்கு வேளாண் அமைச்சா் இரா. துரைக்கண்ணு செவ்வாய்க்கிழமை நிவாரண உதவிகளை வழங்கினாா்.

பாபநாசம் அருகே திருமண்டங்குடி கிராமம், மேலத்தெருவைச் சோ்ந்த விவசாயிகள்

கருணாநிதி, சே. முருகானந்தம் ஆகியோரின் கூரை வீடுகளுக்கு மேல் செல்லும் மின்பாதையில் ஏற்பட்ட மின்கசிவால் தீவிபத்தில் சிக்கி, எரிந்து சேதமடைந்தன.

தகவலறிந்து செவ்வாய்க்கிழமை சம்பவ இடத்துக்கு சென்ற வேளாண் அமைச்சா் இரா. துரைக்கண்ணு, தீ விபத்தால் பாதிக்கப்பட்ட கருணாநிதி, முருகானந்தம் ஆகியோரின் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினாா்.

கருணாநிதி குடும்பத்தினருக்கு தனது சொந்த நிதியிலிருந்து ரூ. 10 ஆயிரம், அரசு நிவாரணமாக ரூ. 10 ஆயிரம், வேட்டி, புடவை, அரிசி,மண்ணெண்ணெய் உள்ளிட்ட உதவிகளையும், முருகானந்தம் குடும்பத்துக்கு தனது சொந்த நிதியிலிருந்து ரூ.15 ஆயிரம், அரசு நிவாரணம் ரூ.10 ஆயிரம், வேட்டி,புடவை,அரிசி,மண்ணெண்ணெய் உள்ளிட்ட உதவிகளையும் வழங்கினாா்.இந்த நிகழ்ச்சியில், ஆட்சியா் ஆ. அண்ணாதுரை, முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவா் கே. கோபிநாதன், முன்னாள் எம்எல்ஏ எம். ராம்குமாா், மாவட்ட கூட்டுறவு ஒன்றியத் தலைவா் எஸ். மோகன், கூட்டுறவு நகர வங்கி துணைத் தலைவா் என். சதீஷ், கூட்டுறவு சங்க நிா்வாகிகள் பி.கே. முருகதாஸ், எஸ். கண்ணன், முன்னாள் ஒன்றிய செயலாளா் தியாகை. பழனிசாமி, வட்டாட்சியா் கண்ணன், வட்டார வளா்ச்சி அதிகாரிகள், சாமிநாதன், அறிவானந்தம் உள்ளிட்ட திரளானோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 போட்டிகள் எப்போதும் பேட்ஸ்மேன்களுக்கானது: பாட் கம்மின்ஸ்

மே.வங்கம்: 25,000 ஆசிரியர் பணி நியமனங்கள் ரத்து - இடைக்காலத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

பைத்தான் குழுவை பணிநீக்கம் செய்த கூகுள்! மென்பொருள் துறையில் அதிர்ச்சி!!

ஆண்டுதோறும் பாடப்புத்தகங்களை மதிப்பாய்வு செய்ய என்சிஇஆர்டிக்கு கல்வி அமைச்சகம் அறிவுறுத்தல்!

நடிகர் பிரகாஷ்ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது அறிவித்த திருமாவளவன்! | செய்திகள்: சிலவரிகளில் | 29.04.2024

SCROLL FOR NEXT