தஞ்சாவூர்

தஞ்சாவூர் மாவட்டக் கூட்டுறவு ஒன்றிய நிர்வாகிகள் தேர்வு

தஞ்சாவூரில் சனிக்கிழமை நடைபெற்ற தஞ்சாவூர் மாவட்டக் கூட்டுறவு ஒன்றியத் தேர்தலில் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

DIN


தஞ்சாவூரில் சனிக்கிழமை நடைபெற்ற தஞ்சாவூர் மாவட்டக் கூட்டுறவு ஒன்றியத் தேர்தலில் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
இதுகுறித்து தஞ்சாவூர் மாவட்டக் கூட்டுறவு ஒன்றிய அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தஞ்சாவூர் மாவட்டக் கூட்டுறவு ஒன்றியத் தேர்தல் கூட்டுறவு சார் பதிவாளர் மாரிமுத்து (தேர்தல் அலுவலர்) தலைமையிலும், கூட்டுறவு சார் பதிவாளரும் மேலாண்மை இயக்குநருமான ராமச்சந்திரன் முன்னிலையிலும் நடைபெற்றது.
இதில், தலைவராக எஸ். மோகன், துணைத் தலைவராக வீ. ராஜா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். நிர்வாகக் குழு உறுப்பினர்களாக இளமதி சுப்பிரமணியன், கே. மனோகரன், எம். சுவாமிநாதன், எம். மாரியய்யா, ஜி. கிருஷ்ணமூர்த்தி, செ. ராசகுமாரன், ஏ.கே. ரவி, சி. கார்த்திகேயன், என். கனகராஜ், ஆர். வெற்றிச்செல்வி, பி.ஆர். தவமணி, எம். ஜெயசித்ரா, பா. சாந்தி, பானுமதி, எஸ். வசந்தி, பெ. தட்சிணாமூர்த்தி, பழனிசாமி, சி. மனோகரன் உள்ளிட்டோர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். 
பதவியேற்பு நிகழ்வில் சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் ராம. ராமநாதன், காவேரி கூட்டுறவுச் சிறப்பங்காடி தலைவர் வி. பண்டரிநாதன், அதிமுக ஒன்றியச் செயலர்கள் துரை. வீரணன், கோ. சாமிவேல், திருவையாறு என். இளங்கோவன், கும்பகோணம் சோழபுரம் கா. அறிவழகன், பகுதி செயலர்கள் வி. அறிவுடைநம்பி. எஸ். சரவணன்,   எஸ். ரமேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய ஊரக வேலைவாய்ப்பு மசோதா கிராமப்புற மக்களுக்கு முற்றிலும் எதிரானது: கனிமொழி

திடீரென ரத்தான சாகித்ய அகாதெமி விருது அறிவிப்பு!

34 ஆண்டுகளுக்குப் பின் இழப்பீடு! தவறான சிகிச்சையால் கை இழந்தவர் அரசிடம் வைக்கும் கோரிக்கை!!

ரஷிய ராணுவத்தில் 202 இந்தியர்கள்! 26 பேர் பலி : மத்திய அரசு தகவல்!

பார்சிலோனா கால்பந்து வீரர் சுட்டுக் கொலை..! ஓராண்டில் 9,000-க்கும் அதிகமான கொலைகள்!

SCROLL FOR NEXT