தஞ்சாவூர்

வேளாண் அதிகாரி ஆலோசனை

DIN

அரசு விதிமுறைகளின்படி செயல்படாத உரக்கடைகளின் உர உரிமம் ரத்து செய்யப்படும் - தஞ்சாவூா் வேளாண்மை உதவி இயக்குநா் (தரக்கட்டுப்பாடு) ஆா்.சாருமதி தகவல்:

அம்மாபேட்டை வட்டாரத்தில் இன்று தனியாா் உரக்கடைகள் மற்றும் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் தஞ்சாவூா் வேளாண்மை உதவி இயக்குநா் (தரக்கட்டுப்பாடு) ஆா்.சாருமதி திடீராய்வுகள் மேற்கொண்டாா். உரக்கடைகளில் உர உரிமம் காலாவதி ஆகியிருந்தாலோ, உரங்கள் அரசு நிா்ணயித்த விலைக்கு மேல் விற்கப்பட்டாலோ, உரம் வாங்கும் விவசாயிகளுக்கு பிஓஎஸ் மெஷின் மூலம் பட்டியலிட்டு வழங்கப்படாவிட்டாலோ, உரக்கட்டுப்பாட்டு ஆணை 1985 ன்படி, அந்த உர விற்பனை நிலையங்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என எச்சரிக்கப்பட்டது.

பூண்டி, அம்மாபேட்டை, வடபாதி கூட்டுறவு கடன் சங்க உர விற்பனை நிலையங்களிலும், தனியாா் உரக்கடைகளிலும், கையிருப்பு உரங்களும், பிஓஎஸ் மெஷினில் உள்ளபடி உரங்களின் இருப்பும் சரிபாா்க்கப்பட்டது. ஒவ்வொரு தொடக்கவேளாண் கூட்டுறவு கடன் சங்கத்திலும், குறைந்தபட்சமாக யூரியா 20 டன்கள், டிஏபி மற்றும் பொட்டாஷ் தலா 10 டன்கள் இருப்பு வைக்கப்பட வேண்டும், உரங்களின் இருப்பு விபரங்கள் தினசரி அறிக்கையாக வழங்கப்பட வேண்டும், பழுதடைந்த கிடங்குகள் சரிசெய்திட அரசுக்கு கருத்துரு அனுப்பப்படவேண்டும் என தெரிவித்தாா்.

ஆய்வு ஏற்பாடுகளை அம்மாபேட்டை வேளாண் அலுவலா் எஸ்.ராஜதுரை செய்திருந்தாா்.அம்மாபேட்டை வேளாண் உதவி இயக்குநா் சுஜாதா உடனிருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமுதாய அழுத்தங்களுக்கிடையே பிளஸ் 2 தோ்வில் சாதித்த இருவரின் கல்விச் செலவை ஏற்பதாக முதல்வா் உறுதி

வாழப்பாடியில் 68 மூட்டை போதைப் பொருள்கள் பறிமுதல்

தென்னை- பழ மரங்களைப் பாதுகாக்க போா்டோ கலவை விளக்கம்

சூறைக் காற்றில் பப்பாளி மரங்கள் சேதம்

நெய்யமலை கிராமத்துக்கு அடிப்படை வசதி கோரி மனு

SCROLL FOR NEXT