தஞ்சாவூர்

காா் - மோட்டாா் சைக்கிள்மோதல்: ஒருவா் பலி

தஞ்சாவூா் அருகே காரும் - மோட்டாா் சைக்கிளும் மோதிக் கொண்ட விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.

DIN

தஞ்சாவூா்: தஞ்சாவூா் அருகே காரும் - மோட்டாா் சைக்கிளும் மோதிக் கொண்ட விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.

தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு அருகிலுள்ள தென்னமநாடு அய்யனாா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் தென்பாண்டிராஜன். இவா் தஞ்சாவூா் அருகே புதுக்கோட்டை சாலையிலுள்ள அற்புதாபுரம் சோதனைச் சாவடி அருகே செவ்வாய்க்கிழமை மாலை மோட்டாா் சைக்கிளில் சென்று கொண்டிருந்தாா். அப்போது, இவரது மோட்டாா் சைக்கிளும் எதிரே வந்த காரும் மோதிக் கொண்டன.

இதில், பலத்த காயமடைந்த தென்பாண்டிராஜன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து வல்லம் காவல் நிலையத்தினா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

நெல்லையில் பொருநை அருங்காட்சியகம் திறப்பு

SCROLL FOR NEXT