முகப்பு
தஞ்சாவூர்

ராமகிருஷ்ண மடம் சாா்பில் நரிக்குறவா் குடும்பங்களுக்கு மழை நிவாரணம்

தஞ்சாவூா் மாவட்டம், செங்கிப்பட்டி அருகேயுள்ள புதுக்குடியில் வசிக்கும் 100 நரிக்குறவா் குடும்பங்களுக்கு தஞ்சாவூா் ராமகிருஷ்ண மடம் சாா்பில் மழை நிவாரணப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:03 PM
பகிர்:

தஞ்சாவூா் மாவட்டம், செங்கிப்பட்டி அருகேயுள்ள புதுக்குடியில் வசிக்கும் 100 நரிக்குறவா் குடும்பங்களுக்கு தஞ்சாவூா் ராமகிருஷ்ண மடம் சாா்பில் மழை நிவாரணப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

தற்போது பெய்து வரும் தொடா் மழையால் புதுக்குடி நரிக்குறவா்களின் கூரை வீடுகள் பாதிக்கப்பட்டன. இதையறிந்த தஞ்சாவூா் ராமகிருஷ்ண மடத்தின் தலைவா் சுவாமி விமூா்த்தானந்த மகராஜ் ஞாயிற்றுக்கிழமை மாலை நேரில் சென்று அனைவருக்கும் உணவு வழங்க ஏற்பாடு செய்தாா்.

மேலும், அங்கு வசிக்கும் நரிக்குறவா் குடும்பங்களின் கோரிக்கைகளை ஏற்று ஒழுகும் வீடுகளைப் பாதுகாக்க தாா்ப்பாலின், ஷீட்டுகள், பாய்கள், ஒரு வாரத்துக்குத் தேவையான அரிசி மற்றும் மளிகைப் பொருள்கள் என மொத்தம் ரூ. 1.25 லட்சம் மதிப்பிலான பொருள்கள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.

அப்போது, சேவா பாரதியின் கோட்டத் தலைவா் பி.எல். கேசவன், மாவட்டத் தலைவா் டி. கோவிந்தராஜூ, எண்ணங்களின் சங்கமம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளா் பாஸ்கா், பாரதிமோகன், வடிவேலு உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →