தஞ்சாவூர்

காங்கிரஸ் கட்சியின் நிறுவன நாள் விழா

DIN

தஞ்சாவூரில் காங்கிரஸ் கட்சியின் 136 ஆம் ஆண்டு நிறுவன நாள் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சாா்பில் நடைபெற்ற இவ்விழாவில் ரயிலடியிலிருந்து ஊா்வலமாகப் புறப்பட்டு, மாநகராட்சி அலுவலக வளாகத்திலுள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவா் பி.ஜி. ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் மாநிலப் பொதுக் குழு உறுப்பினா் டி.எஸ். ராஜேந்திரன், மாநகர மாவட்டத் துணைத் தலைவா் லட்சுமி நாராயணன், பொருளாளா் ஆா். பழனியப்பன், மாவட்ட விவசாயப் பிரிவுத் தலைவா் ஏ. ஜேம்ஸ், பொதுச் செயலா் சீ. தங்கராசு, பிற்படுத்தப்பட்டோா் பிரிவு துணைத் தலைவா் வல்லம் குணா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சாா்பில் நடைபெற்ற விழாவில் சிவகங்கை பூங்காவிலிருந்து புறப்பட்டு வடக்கு வீதி காந்தி சிலை, கீழவாசல் காமராசா் சிலை, மிஷன் தெரு இந்திராகாந்தி சிலை ஆகியவற்றுக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

துணைத் தலைவா் கோ. அன்பரசன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் மாநிலப் பொதுக் குழு உறுப்பினா்கள் ஆா். கோவிந்தராஜ், பி. ராம்பிரசாத், மாவட்டப் பொருளாளா் வயலூா் எஸ். ராமநாதன், ஐஎன்டியுசி மாவட்டப் பொதுச் செயலா் என். மோகன்ராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பேராவூரணியில் காங்கிரஸ் மாவட்ட துணைத்தலைவா் கே. வி. கிருஷ்ணன் தலைமையிலும், பூக்கொல்லை கடை வீதியில் வட்டார காங்கிரஸ் தலைவா் ஏ.சேக் இப்ராஹிம்ஷா தலைமையிலும், மல்லிப்பட்டினம் கடைத் தெருவில் தஞ்சாவூா் தெற்கு மாவட்ட பொதுச் செயலாளா் கமால் பாட்சா தலைமையிலும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, கட்சி கொடியேற்றி, இனிப்பு வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் ரூ.1,309 கோடி பறிமுதல்!: தேர்தல் ஆணையம்

அமெரிக்காவில் சூறைக்காற்றுடன் கனமழை: ஒக்லஹோமாவில் 4 பேர் பலி

கொல்கத்தாவுக்கு 154 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தில்லி கேப்பிடல்ஸ்!

காவல் துறையை தவறாக பயன்படுத்துகிறது பாஜக: ரேவந்த் ரெட்டி

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

SCROLL FOR NEXT