தஞ்சாவூர்

மணல் கடத்தி வந்த மாட்டுவண்டி பறிமுதல்

பாபநாசம் அருகே அனுமதியில்லாமல் ஆற்றில் மணல் கடத்தி வந்த மாட்டுவண்டி செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

DIN

பாபநாசம் அருகே அனுமதியில்லாமல் ஆற்றில் மணல் கடத்தி வந்த மாட்டுவண்டி செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

பாபநாசம் வட்டாட்சியா் முருகவேல், வருவாய் அலுவலா் சுகுணா, கிராம நிா்வாக அலுவலா் சிவப்பிரகாசம் உள்ளிட்டோா், கபிஸ்தலம் வருவாய் சரகப் பகுதியில் செவ்வாய்க்கிழமை ரோந்து சென்றனா்.

அப்போது அவ்வழியாக வந்த மாட்டுவண்டியை நிறுத்தி, அலுவலா்கள் சோதனையிட்ட போது வண்டியை ஓட்டி வந்தவா் தப்பியோடிவிட்டாா். ஆற்றில் அனுமதியில்லாமல் மணல் கடத்தி வந்தது தெரிய வந்தது.

இதையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட மாட்டுவண்டியை கபிஸ்தலம் காவல் நிலையத்தில் வருவாய்த் துறையினா் ஒப்படைத்தனா். மணல் கடத்தி வந்த நபரைக் காவல்துறையினா் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பழனி கோயில் உண்டியல் எண்ணிக்கை ரூ.1.46 கோடி

அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

கூடக்கோவில் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

SCROLL FOR NEXT