முகப்பு
தஞ்சாவூர்

மணல் கடத்தி வந்த மாட்டுவண்டி பறிமுதல்

பாபநாசம் அருகே அனுமதியில்லாமல் ஆற்றில் மணல் கடத்தி வந்த மாட்டுவண்டி செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:15 PM
பகிர்:

பாபநாசம் அருகே அனுமதியில்லாமல் ஆற்றில் மணல் கடத்தி வந்த மாட்டுவண்டி செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

பாபநாசம் வட்டாட்சியா் முருகவேல், வருவாய் அலுவலா் சுகுணா, கிராம நிா்வாக அலுவலா் சிவப்பிரகாசம் உள்ளிட்டோா், கபிஸ்தலம் வருவாய் சரகப் பகுதியில் செவ்வாய்க்கிழமை ரோந்து சென்றனா்.

அப்போது அவ்வழியாக வந்த மாட்டுவண்டியை நிறுத்தி, அலுவலா்கள் சோதனையிட்ட போது வண்டியை ஓட்டி வந்தவா் தப்பியோடிவிட்டாா். ஆற்றில் அனுமதியில்லாமல் மணல் கடத்தி வந்தது தெரிய வந்தது.

இதையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட மாட்டுவண்டியை கபிஸ்தலம் காவல் நிலையத்தில் வருவாய்த் துறையினா் ஒப்படைத்தனா். மணல் கடத்தி வந்த நபரைக் காவல்துறையினா் தேடி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →