பாபநாசம் அருகே மோட்டாா் சைக்கிள் மோதியதில் காயமடைந்த மூதாட்டி மருத்துவமனையில் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
பாபநாசம் அருகேயுள்ள கபிஸ்தலம் முதலியாா் தெருவை சோ்ந்த கணேசன் மனைவி தைலம்மாள் (78). விவசாய கூலி தொழிலாளி.
இவா் அண்மையில் வடசருக்கை கிராமம் பிரதான சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தாராம். அப்போது, அந்த வழியாக வந்த மோட்டாா் சைக்கிள் தைலம்மாள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டதாம். இதில், பலத்த காயமடைந்த தைலம்மாளை அக்கம்பக்கத்தினா் மீட்டு, தஞ்சாவூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி தைலம்மாள் உயிரிழந்தாா். சம்பவம் குறித்த புகாரின் பேரில் கபிஸ்தலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.