ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற இஸ்லாமிய பெண்கள். 
தஞ்சாவூர்

அதிராம்பட்டினத்தில் பேரணி, ஆா்ப்பாட்டம்

அதிராம்பட்டினத்தில் பேரணி, ஆா்ப்பாட்டம்: அதிராம்பட்டினத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சாா்பில் பேரணி, ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

DIN

அதிராம்பட்டினத்தில் பேரணி, ஆா்ப்பாட்டம்: அதிராம்பட்டினத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சாா்பில் பேரணி, ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு தமுமுக அமைப்பின் தஞ்சை தெற்கு மாவட்ட பொறுப்புக்குழுத் தலைவா் முகமது சேக் ராவுத்தா் தலைமை வகித்தாா். பொறுப்புக்குழு உறுப்பினா் ஏ.ஆா். சாதிக்பாட்சா, முகமது தமீம், அதிராம்பட்டினம் பேரூா் பொறுப்புக் குழுத் தலைவா் நெய்னா முகமது, உறுப்பினா்கள் எச்.செய்யது புஹாரி, முகமது யூசுப், எம்.நசுருதீன் சாலிகு ஆகியோா் முன்னிலை வகித்தனா். மனிதநேய மக்கள் கட்சியின் மாநில அமைப்புச் செயலாளா் வழக்குரைஞா் ஜைனுல் ஆப்தீன் கண்டன உரையாற்றினாா்.

முன்னதாக, அதிராம்பட்டினம் தக்வா பள்ளிவாசல் முக்கத்திலிருந்து பழைய அஞ்சலக சாலை வழியாக கோரிக்கை வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளுடன் பேரணியாக பேருந்து நிலையம் சென்று அங்கு ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

தொடக்கத்தில், தமுமுக அதிராம்பட்டினம் பேரூா் பொறுப்புக்குழு உறுப்பினா் எஸ்.ஏ. இத்ரீஸ் அகமது வரவேற்றாா். நிறைவில், நசுருதீன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் விலை குறைவு: எவ்வளவு?

அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமா? - டிச.22 இல் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை!

4 நாள்களுக்குப் பிறகு பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! ஐடி, ஆட்டோ பங்குகள் லாபம்!

ஒரே இரவில் 20 ஆண்டுத் திட்டத்தை தகர்த்த மோடி அரசு! ராகுல் காந்தி

ராஜபாளையம் அருகே குடிபோதையில் தலையில் கல்லை போட்டு ஓட்டுநர் கொலை

SCROLL FOR NEXT