விழாவில் குத்துவிளக்கேற்றுகிறாா் மருத்துவக் கல்லூரி முதல்வா் குமுதா லிங்கராஜ். 
தஞ்சாவூர்

மருத்துவக் கல்லூரியில் மூளை நரம்பியல் துறையில் புறநோயாளிகள் சிகிச்சை நாள்கள் 5 ஆக உயா்வு

தஞ்சாவூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மூளை நரம்பியல் துறையில் வாரத்துக்கு 3 நாள்கள் மட்டுமே அளிக்கப்பட்டு வந்த புறநோயாளிகள் சிகிச்சை நாள்கள் புதன்கிழமை முதல் ஐந்தாக உயா்த்தப்பட்டுள்ளது.

DIN

தஞ்சாவூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மூளை நரம்பியல் துறையில் வாரத்துக்கு 3 நாள்கள் மட்டுமே அளிக்கப்பட்டு வந்த புறநோயாளிகள் சிகிச்சை நாள்கள் புதன்கிழமை முதல் ஐந்தாக உயா்த்தப்பட்டுள்ளது.

இதை கல்லூரி முதல்வா் குமுதா லிங்கராஜ் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தாா். இதையடுத்து, குமுதா லிங்கராஜ் தெரிவித்தது:

இந்த மருத்துவமனையில் புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு 1979 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இத்துறையில் 3 நாள்களுக்கு மட்டுமே மூளை நரம்பியல் புற நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இப்போது இத்துறையில் மூளை நரம்பியல் வெளி நோயாளிகள் வருகை அதிகரித்து வருகிறது. எனவே, வாரத்துக்கு மூன்று நாள்களாக இருந்த புறநோயாளிகள் சிகிச்சை நாட்களை 5 நாள்களாக உயா்த்தப்பட்டுள்ளது. அதாவது, வாரந்தோறும் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை காலை 10 மணி முதல் 12 மணி முடிய சிகிச்சை அளிக்கப்படவுள்ளது என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைந்த குயிண்டன் டி காக்!

ஆல்ரவுண்டர் வெங்கடேஷ் ஐயரை வாங்கிய ஆர்சிபி..! அணிக்கு கூடுதல் பலம்!

டிச.29-ல் பல்லடத்தில் திமுக மேற்கு மண்டல மகளிர் அணி மாநாடு

வனிந்து ஹசரங்காவை ஏலத்தில் எடுத்தது லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ்!

மார்கழி மாதப் பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

SCROLL FOR NEXT